2 பொண்டாட்டிகளுடன் குதூகலமாக இருந்த விவசாயி..!! குறுக்கே வந்த மூத்த மகன்..!! பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

Marriage 2025 1

பெரம்பலூர் மாவட்டம் அ.மேட்டூர் பகுதியில் 43 வயதான ராஜா என்பவர், விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு, அதே பகுதியில் வசிக்கும் ரேவதி என்பவருடன் முதலாவது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.


பின்னர் ராஜா, மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திலேயே அவருக்கு மேலும் ஒரு மகன் மற்றும் மகள் பிறந்துள்ளனர். இரு குடும்பங்களும் ஒரே பகுதியில், தனித் தனியாக வீடு எடுத்துப் பார்ப்பதுடன், ராஜா இந்த இரண்டாம் திருமணத்துக்குப் பின்னர் பெரும்பாலும் முதல் மனைவியின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.

இரண்டாவது திருமணம் செய்ததிலிருந்து ராஜாவுக்கும் ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. ராஜா குடிபோதைக்கு அடிமையாகி, அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ரேவதியின் மகன் ராசுக்குட்டி (வயது 20) நண்பர்களுடன் இணைந்து பந்தல் அமைத்து ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பின்னர், பந்தலின் அருகே நண்பர்களுடன் ஓய்வெடுத்து தூங்கிக்கொண்டிருந்த ராசுக்குட்டியை, அதிகாலை நேரத்தில் தந்தையான ராஜா தாக்கியுள்ளார். அப்போது, திடீரென கடப்பாரையால் தலையில் பலமாக தாக்கியதில் ராசுக்குட்டி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த ராசுக்குட்டியின் நண்பர்கள் கூச்சலிட, ராஜா அங்கிருந்து தப்பிச் சென்றார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராசுக்குட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், மருவத்தூரில் பதுங்கியிருந்த ராஜாவை பிடித்து கைது செய்தனர். தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : கோயிலுக்கு பக்கத்துல இப்படி ஒரு கேவலமான செயலா..? பொது இடத்தில் வைத்தே விபச்சார தொழில்..!! திருப்பூரில் ஷாக்கிங் சம்பவம்..!!

CHELLA

Next Post

"எல்லாம் காசு கொடுத்து வந்த கூட்டம்.." தேமுதிக கூட்டத்தில் EPS-ஐ விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்..!!

Sun Aug 31 , 2025
"A crowd that came to pay for everything.." Premalatha Vijayakanth criticized EPS at the DMDK meeting..!!
Premalatha Eps 2025

You May Like