பவர்கிரிட் நிறுவனத்தில் களப் பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பணிகளுக்காக 1543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
- கள பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) -532
- கள பொறியாளர் (சிவில்)- 198
- கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல்) -535
- கள மேற்பார்வையாளர் (சிவில்) -193
- கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன்) – 85
கல்வித்தகுதி:
களப் பொறியாளர் (மின்சாரம்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் மின் துறையில் முழுநேர BE / B.Tech / B.Sc (Eng.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
களப் பொறியாளர் (சிவில்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் பிரிவில் முழுநேர பி.இ / பி.டெக் / பி.எஸ்சி (இன்ஜி.) முடித்திருக்க வேண்டியது அவசியம்.
வயது வரம்பு: கள பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பதவிக்கு 29 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் ஒபிசி 3 வருடம், எஸ்சி/எஸ்டி 5 வருடம், மாற்றுத்திறனாளிகள் 10 வருடம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: பொது எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். கள பொறியாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும்.கள மேற்பார்வையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தப்பட்டு பணி வழங்கப்படும்.
சம்பளம்: பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். கள மேற்பார்வையாளர் பதவிக்கு மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கள மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 17-ம் தேதி கடைசி தேதியாகும்.