இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 பெண்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.
இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்டோரை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. கொழும்பிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் கிழக்கே உள்ள எல்லா நகரத்திற்கு அருகில் உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணியளவில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒன்பது பெண்கள் ஆவர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த ஜீப்பில் மோதி 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Readmore: லண்டனில் வீடு, விலையுயர்ந்த கார்கள், சச்சின் டெண்டுல்கருக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது தெரியுமா?