“இது டிரெய்லர் தான்.. தங்கம் விலை மேலும் உயரும்..” நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் முன்வைக்கும் காரணம்..!!

ChatGPT Image Jul 1 2025 09 24 01 AM 1 1

வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து விட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ. 10,005-க்கு, ஒரு சவரன் தங்கம் ரூ. 80,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரியில் சவரன் விலை ரூ. 57,000 இருந்தது. இன்று அதே சவரன் ரூ. 80,000 தாண்டியுள்ளது. அதாவது வெறும் சில மாதங்களில் சுமார் ரூ. 20,000 கூடுதலாக உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.3,050 உயர்ந்து மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


தங்க விலையின் புது உச்சத்துக்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்தியாவுக்கு எதிராக அவர் 50% வரி விதித்ததால் உலக பொருளாதாரத்தில் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் நேரடியாக தங்க விலையை உயர்த்தியுள்ளது என்று தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்தி லால் சலானி கூறியுள்ளார்.

ஜெயந்தி லால் சலானி மேலும் கூறுகையில்: “டொனால்ட் டிரம்பின் தவறான முடிவுகள் காரணமாக பல நாடுகள் டாலருக்குப் பதிலாக தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளன. இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கருவூலத்திலும் தங்க இருப்புகளை அதிகரித்துள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கிறது. ரூ.80,000 கடந்த நிலையில், இன்னும் சிறிதளவு உயர வாய்ப்பு உள்ளது” என்றார்.

இது ஒரு புறம் இருக்க தற்போது பண்டிகை காலமும், திருமண சீசனும் தொடங்கியுள்ளதால் தங்க நகை விற்பனை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்திருந்தாலும், மக்கள் ஆர்வம் குறையாமல் இருப்பது வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மிக முக்கியமாக தங்கம் வாங்கும்போது 916 ஹால் மார்க் முத்திரையும், 6 இலக்க HUID எணும் பில்லில் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். மேக்கிங் சார்ஜ் அதிகம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஒப்பிட்டு வாங்குவது நல்லது.

Read more: புயல் வேகத்தில் வளர்ந்து வரும் AI..!! இன்னும் 5 வருஷத்துல அனைவரும் வீட்ல தான் இருக்கணும்..!! மாற்று வழியே கிடையாதாம்..!!

English Summary

“This is just a trailer.. Gold prices will rise further..” The reason given by the president of the Jewelers’ Association..!!

Next Post

“நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுனான் சார்”..!! லாட்ஜில் ரூம் போட்டு பெண் வழக்கறிஞருடன் உல்லாசம்..!! கடைசியில் ட்விஸ்ட் அடித்த காவலர்..!!

Sun Sep 7 , 2025
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மங்களூருவைச் சேர்ந்த காவலர் சித்தேகவுடா (32) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு பெங்களூருவைச் சேர்ந்த அந்த இளம் பெண் வக்கீலுக்கும், மங்களூருவில் உள்ள நக்சல் ஒழிப்புப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சித்தேகவுடாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. […]
Sex 2025 1

You May Like