சித்தப்பாவுடன் உல்லாசம்..!! கணவரின் மார்பில் அமர்ந்து கள்ளக்காதலன் செய்த பயங்கரம்..!! 8 வயது மகனை வெச்சிக்கிட்டே இப்படியா..?

Sex 2025 1

கர்நாடக மாநிலம் விஜயபுராவில் கணவனைக் கொல்ல முயன்ற சுனந்தா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து நடத்திய இந்த கொலை முயற்சியில், கணவர் பீரப்பா காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.


விஜயபுரா, இந்தி நகரில் வசித்து வந்த பீரப்பா மாயப்ப பூஜாரி, தனது மனைவி சுனந்தா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தார். போலீசாரின் கூற்றுப்படி, சுனந்தாவுக்கு சித்தப்பா கயத்தகேரி என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த உறவுக்கு தடையாக இருந்த கணவர் பீரப்பாவை கொல்ல, சுனந்தா திட்டமிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், ஒரு இரவு பீரப்பா தூங்கிக் கொண்டிருந்தபோது, சுனந்தா தனது காதலன் சித்தப்பா மற்றும் அவரது நண்பனை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். இருவரும் சேர்ந்து பீரப்பாவின் மார்பில் அமர்ந்து கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளனர். உடனே சுதாரித்துக் கொண்ட பீரப்பா, அவர்களை எட்டி உதைத்து எழுப்பிய சத்தம் கேட்டு, வீட்டு உரிமையாளர் கதவை தட்டியுள்ளார். அப்போது பீரப்பாவின் 8 வயது மகன் கதவைத் திறந்ததும், சித்தப்பாவும் அவரது நண்பனும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீரப்பா, தனது மனைவி மீது புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சுனந்தாவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சித்தப்பா மற்றும் அவரது நண்பனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதற்கிடையில், சித்தப்பா எங்கிருந்தோ வெளியிட்ட ஒரு வீடியோவில், இந்த கொலை திட்டத்தை சுனந்தாதான் வகுத்ததாகவும், அவர்தான் நாளையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்ததாகவும் கூறியிருக்கிறார். இந்தி ஷஹார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : அண்ணனும் தம்பியும் சேர்ந்து பாக்குற வேலையா இது..? பள்ளி மாணவிகளை நாசம் செய்த அதிமுக நிர்வாகிகள்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!

CHELLA

Next Post

நேபாளத்தில் ராணுவ ஊரடங்கு அமல்! இந்திய எல்லையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

Wed Sep 10 , 2025
நேபாள அரசின் சமூக ஊடகத் தடை மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நேற்று முன் அந்நாட்டு இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சுமார் 20 பேர் இதில் உயிரிழந்தனர்.. 500 பேர் காயமடைந்தனர்.. திங்கள் கிழமை இரவே அரசு சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கினாலும், போராட்டம் நேற்றும் தீவிரமடைந்தது. சமூக ஊடகங்கள் மீதான தடையால் கோபமடைந்த Gen Z போராட்டக்காரர்கள் பேரழிவை […]
nepal curfew

You May Like