பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்..
இந்த நிலையில், அன்புமணியை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.. 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் உரிய விளக்கம் அளிக்காததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.. அன்புமணி உடன் பாமகவினர் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. கட்சி விதிகளின் படி, ஜனநாயக முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பின்னரே அன்புமணி நீக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் அன்புமணி பேசுவதெல்லாமே பொய் என்றும், தன்னோடு 40 முறை பேசியதாக அவர் சொன்னது பொய் எனவும் குற்றம்சாட்டினார்.. மேலும் “ யார், யாரை வேவு பார்ப்பது? இதை விட மோசமான செயல் இருக்க முடியுமா? அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளாம்.. இரா. என இன்ஷியலை தவிர, ராமதாஸ் என்ற பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது..
அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என மூத்தவர்கள் சொல்லியும் அன்புமணி கேட்கவில்லை.. அவர் தான் தோன்றித்தனமாக செயல்பட்டார். பல்வேறு தரப்பினர் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அன்புமணிக்கு இல்லை. பாமக என்பது நான் தொடங்கிய கட்சி.. நான் ஓடி ஓடி உழைத்து உருவாக்கிய கட்சி.. கஞ்சயோ, கூழோ குடித்து, 96,000 கிராமங்களுக்கு சென்று பாமகவை உருவாக்கி உள்ளேன்.. 46 ஆண்டுகள் பாடுபட்டு வளர்த்த கட்சி அன்புமணியால் அழிகிறதே என்பதால் மனம் பொறுக்கவில்லை.. அதனால் தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் அன்புமணி தரப்பு வழக்கறிஞர் டி.ஆர். பாலு செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ ராமதாஸின் அறிவிப்பு அன்புமணியை கட்டுப்படுத்தாது.. பாமக தலைவர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை.. ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மட்டுமே அந்த நிலையில், கட்சி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அவருக்கு அதிகாரம் உள்ளது..
அன்புமணி தரப்பு கூட்டிய பாமக பொதுக்குழுவை தேர்தல் அங்கீகரித்துள்ளது.. அன்புமணி பதவிகாலம் நீட்டிக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே அன்புமணி தான் பாமகவின் தலைவர்.. கட்சி விதிகளின் அடிப்படையில் அன்புமணி தலைவராகவே நீடிக்கிறார்..” என்று தெரிவித்தார்..
Read More : அன்புமணியை ராமதாஸ் நீக்கியது செல்லுமா? பாமகவில் அடுத்தது என்ன? உண்மையான அதிகாரம் யாருக்கு? பரபரப்பு தகவல்..



