“நான் ஒன்னும் உத்தமன் கிடையாது.. நானும் எல்லாம் பண்ணிருக்கேன்”..!! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!

Nanjil Vijayan 2025 1

பிரபல விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். சமீபத்தில் இவர் மீது திருநங்கை வைஷ்ணவி பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, நாஞ்சில் விஜயன் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், தற்போது தன்னை தவிர்த்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.


வைஷ்ணவி வெளியிட்ட ஒரு வீடியோவில், நாஞ்சில் விஜயன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவரது இந்த செயல் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு தன்னை தள்ளியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், வைஷ்ணவியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியவுடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவரது மனைவி மரியா, “என் கணவரை ஏன் இப்படி அவதூறாகப் பேசுறீங்க..? இந்த சம்பவத்தால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி செய்கிறீர்களா..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாஞ்சில் விஜயன் பேசுகையில், “எனக்கும் வைஷ்ணவிக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் அவரை ஒரு சகோதரி போல தான் பார்த்தேன். அவர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார்” என்று கூறியுள்ளார்.

இரு தரப்பினரின் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read More : “நீ அவன் கூட மட்டும் தான் உல்லாசமா இருப்பியா”..? கள்ளக்காதலியை கரெக்ட் செய்ய முயன்ற விவசாயி..!! நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!

CHELLA

Next Post

மனைவியின் செல்போனில் கொட்டிக் கிடந்த ஆபாச வீடியோக்கள்..!! பல ஆண்களுடன் உடலுறவு..!! பூசாரி செய்த பயங்கர சம்பவம்..!!

Fri Sep 12 , 2025
ஆந்திர மாநிலம் நந்தியாலில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் பூசாரியாக இருந்த சாய்நாத் சர்மா (38), தனது மனைவி ஸ்ரீஷா (35) மற்றும் 18 வயது மகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சாய்நாத் சர்மாவின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, ஸ்ரீஷா கழுத்தறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, காவல் நிலையம் வந்த சாய்நாத் சர்மா, […]
Video 2025 1

You May Like