திடீரென தனியாக கழன்று ஓடிய விமானத்தின் சக்கரம்..!! பீதியில் உறைந்து போன பயணிகள்..!! பதபதைக்கும் வீடியோ..!!

Flight 2025

குஜராத்தின் கண்ட்லா விமான நிலையத்தில் இருந்து Q400 ரக டர்போப்ராப் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று மும்பை நோக்கிப் புறப்பட்டது. விமானத்தின் வலதுபுற ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், டேக் ஆஃப் ஆகும் காட்சியைக் காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.


விமானம் ஓடுபாதையில் வேகமாக வந்தபோது, வலதுபுறத்தின் ஒரு சக்கரம் கழன்று விழுந்துள்ளது. விமானத்தில் மொத்தமாக நான்கு சக்கரங்கள் இருக்கும். வலதுபுறத்தில் ஒரு சக்கரம் கழன்ற நிலையில், விமானம் எப்படித் தரையிறங்கும் எனப் பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால், விமானி சாதுர்யமாக செயல்பட்டு, விமானத்தின் மொத்த எடையையும் இடதுபுற சக்கரங்களுக்கு செல்லுமாறு செய்தார்.

இதனால், வலதுபுறத்தில் இருந்த ஒற்றை சக்கரம் பாதுகாப்பாக தரையிறங்க போதுமானதாக இருந்தது. விமானம் மும்பை விமான நிலையத்தில் திட்டமிட்டபடி சரியான நேரத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் உல்லாசம்..!! கணவன் கிளம்பியதும் வீட்டிற்கு வந்து..!! நேரில் பார்த்த தந்தை..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

CHELLA

Next Post

நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ரேபிஸ் நோயால் எத்தனை பேர் இறக்கிறார்கள்? நாய் கடித்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

Sat Sep 13 , 2025
வீட்டில் செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதும், அவற்றுடன் நேரத்தை செலவிடுவதும் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. ஆனால் இவற்றால் ஏற்படும் ரேபிஸ் நோய் மிகவும் ஆபத்தானது. ஒருமுறை ரேபிஸ் நோய் தாக்கினால், அதிலிருந்து தப்பிப்பது மிகவும் கடினம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 முதல் 20,000 பேர் இந்த நோயால் இறக்கின்றனர் என்று கால்நடை நிபுணர் டாக்டர் லிங்கா ரெட்டி எச்சரித்தார். ரேபிஸ் வைரஸ் முக்கியமாக […]
Dogs 2025

You May Like