தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளது. மதுரை மாநாட்டை தொடர்ந்து, தனது முதல் கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தை தவெக தலைவர் விஜய், செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கினார்.
இந்தக் கூட்டத்திற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், அந்த நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. இதன் விளைவாக, விதிகளை மீறியதாக, தவெக-வின் 7 நிர்வாகிகள் மீது திருச்சி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
விஜய் பயணத்தின்போது, கட்டுக்கடங்காமல் கூட்டம் திரண்டதால், பயணத்தில் தாமதம் ஏற்பட்டது. தவெக தொண்டர்கள் காவல்துறையின் நிபந்தனைகளை மீறியதுடன், சில இடங்களில் தனியார் மற்றும் அரசு சொத்துகளையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், திருச்சி மாவட்டத் தலைவர் கரிகாலன், மகளிர் அணி மாவட்டத் தலைவி துளசி மணி மற்றும் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதித்ய சோழன், இமயத் தமிழன், விக்னேஷ் குமார் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அல்லது பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : வாட்ஸ் அப்பில் வந்த அசத்தலான அப்டேட்..!! AI செய்யும் மாயாஜாலம்..!! இனி வீடியோ காலை இப்படியும் மாற்றலாம்..!!



