பாதாள சாக்கடையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி.. திருச்சியில் சோகம்!

sanitation work

திருச்சி திருவெறும்பூர் அருகேபாதாள சாக்கடையில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்..

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கார்மல் கார்டன் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை தூய்மை பணியில் ரவி, பிரபு  ஆகிய துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது விஷ வாயு தாக்கியதில் ரவி, பிரபு ஆகியோர் மயக்கமடைந்த நிலையில் குழிக்குள் விழுந்தனர்.. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


இதுகுறித்த தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர்  அங்கு உயிரிழந்தவர்களின் உடல்களை சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டனர்.. இதையடுத்து காவல்துறையினர் இருவரின் உடல்களையும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், இருவர் மட்டும் தான் துப்புரவு பணியில் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. துப்புரவு பணியில் ஈடுபட்ட இருவர் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

Read More : மாமன் மகனுடன் கள்ள உறவு..!! நேரில் பார்த்த தாய்..!! செப்டிக் டேங்கில் கிடந்த எலும்பு..!! வீட்டு உரிமையாளரால் அம்பலமான உண்மை..!!

RUPA

Next Post

உங்கள் குழந்தை நீங்கள் சொல்வதை கேட்கவில்லையா? அது குழந்தையின் தவறு இல்லை.. இதெல்லாம் தான் காரணம்..!

Mon Sep 22 , 2025
“என் மகன்/மகள் என் பேச்சைக் கேட்பதில்லை, நான் என்ன சொன்னாலும், அவர்கள் என் பேச்சைக் கேட்பதில்லை” என்பது தான் அனைத்து பெற்றோரிடம் இருந்து வரும் புகாராக உள்ளது.. நம் குழந்தைகள் நம் பேச்சைக் கேட்டு சரியான பாதையில் செல்ல வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும் உங்கள் குழந்தைகள் உங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால், ஒரு கணம் யோசித்துப் […]
parenting

You May Like