அகமதாபாத் சபர்மதி எகஸ்பிரஸ் பயணிகளிடம் ஒரு நபர் பாம்பை வைத்து மிரட்டி பணம் கேட்பது போன்ற ஒரு வைரல் வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூக ஊடகங்களில் பரவலாக பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவில், ஒரு விஷமற்ற பாம்புடன் அந்த நபர் நடந்து செல்வதை பார்க்க முடிகிறது.. பயணிகளிடமிருந்து சில அங்குலங்கள் தொலைவில் இருப்பது, பீதி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தியது.
அந்த நபர் ரயிலில் ஏறும்போது பல பயணிகள் தயக்கத்துடன் பணம் கொடுப்பதைக் காணலாம். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சமூக ஊடக பயனர்கள் இந்த செயலை “பொழுதுபோக்காக மாறுவேடமிட்டு மிரட்டி பணம் பறித்தல்” என்றும், வழக்கமான பயணிகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறிப்பிட்டு விரைவாக பதிலளித்தனர்.
“முங்காலி பகுதியில் (எம்.பி.) பாம்புடன் ஒரு மனிதன் ஏறினான். இந்திய ரயில்வேயில் கடின உழைப்பாளி தொழிலாளர் வகுப்பினரிடமிருந்து பணம் எடுப்பதற்கான புதிய வழி” என்று ஒரு எக்ஸ் பயனர் ரயில்வே அதிகாரிகளை டேக் செய்தார். இந்தப் பதிவு விரைவில் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது, பொதுமக்களின் கோபத்தையும் ரயில்களில் இத்தகைய நடத்தைக்கு எதிராக கடுமையான அமலாக்கத்திற்கான கோரிக்கைகளையும் எழுப்பியது.
இதற்கு எதிர்வினையாக, அதிகாரப்பூர்வ ரயில்வே நிர்வாகமும் விளக்கம் கோரியுள்ளது.. இதுகுறித்து எக்ஸ் பக்க பதிவில் “உங்கள் பயண விவரங்கள் (PNR / UTS எண்) & மொபைல் எண் எங்களுக்குத் தேவைப்படும், முன்னுரிமை DM மூலம். உங்கள் கவலையை நேரடியாக RailMadad இல் தெரிவிக்கலாம்
அல்லது விரைவான தீர்வுக்காக 139 ஐ அழைக்கலாம் – RPF India,” என்று தெரிவித்துள்ளது..
பொது பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு, ரயில்களில் மிரட்டி பணம் பறித்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.



