ஜாக்பாட்..!! அரசு ஊழியர்களுக்கு கொட்டப் போகும் தீபாவளி போனஸ்..!! வெளியான செம அறிவிப்பு..!!

Diwali 2025 1

இந்த ஆண்டு தீபாவளி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரவுள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை கணிசமாக உயர்த்தக்கூடிய 2 முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. அகவிலைப்படி (DA) உயர்வு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடி நிதி நிவாரணத்தை வழங்கும்.


உதாரணமாக 55% அகவிலைப்படி பெற்றவருக்கு ரூ.9,000 ஓய்வூதியம், ரூ.4,950-ஆக இருக்கும். இது 58% ஆக உயர்த்தப்படும்போது, ரூ.5,220 ஆக அதிகரிக்கும். அதாவது மாதத்திற்கு ரூ.270 கூடுதலாக கிடைக்கும். கடந்த ஜனவரி 16ஆம் தேதி, 8-வது சம்பளக் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த குழுவின் விதிமுறைகள் தீபாவளிக்கு முன்னதாகவே இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சம்பளக் குழு, வரும் ஆண்டுகளுக்கான சம்பளம், படிகள் மற்றும் ஓய்வூதியங்களை மதிப்பாய்வு செய்து பரிந்துரைக்கும். பொதுவாக, இதுபோன்ற குழுக்கள் அறிக்கை சமர்ப்பிக்க 15 முதல் 18 மாதங்கள் ஆகும். ஆனால், இந்த முறை 8 மாதங்களில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது, புதிய சம்பளம் மற்றும் ஓய்வூதிய அமைப்பை ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்த உதவும்.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்

அகவிலைப்படி உயர்வு மட்டுமன்றி, ரயில்வே ஊழியர்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10.91 லட்சம் அரசிதழ் பதிவு பெறாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு சமமான உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்கப்படுகிறது. இதன் அதிகபட்ச தொகை ரூ.17,951 ஆகும். கடந்தாண்டு 11.72 லட்சம் ஊழியர்களுக்கு ரூ.2,028 கோடி போனஸாக வழங்கப்பட்டது.

ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கவும், ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த போனஸ் வழங்கப்படுகிறது. ரயில்வே ஊழியர்களான தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், நிலைய மேலாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் இந்த போனஸைப் பெறுவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு மற்றும் 8-வது சம்பளக் குழு அமைப்பது, அரசு ஊழியர்களின் நிதி வளர்ச்சிக்கு நீண்டகால பலனை வழங்கும். அதேபோல், ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பு, பண்டிகை கால மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கும். இந்த இரண்டு அறிவிப்புகளும் கோடிக்கணக்கான மக்களின் தீபாவளியை பிரகாசமாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : போதையில் உலா வந்த இளம்பெண்..!! பிரியாணி வாங்கிக் கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!

CHELLA

Next Post

பொதுத்துறை வங்கியில் வேலை.. ரூ.93,960 வரை சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க..!

Thu Sep 25 , 2025
Job in a public sector bank.. Salary up to Rs.93,960.. Apply immediately..!
bank job

You May Like