தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் தொழிற்பயிற்சி.. 1,588 பணியிடங்கள்..!! செம அறிவிப்பு..

TN Bus 2025

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) 2025-ம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,588 இடங்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. பொறியியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, பொறியியல் அல்லாத பிரிவில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணியிட விவரம்:

* விழுப்புரம் மண்டலத்தில் பொறியியல் பட்டப்படிப்பிற்குத் 100, பொறியியல் டிப்ளமோக்கு 40 மற்றும் இதர பட்டப்படிப்புக்காக 90 இடங்கள் உள்ளன.

* கும்பகோணம் மண்டலத்தில் 72 பொறியியல் பட்டப்படிப்பு, 136 டிப்ளமோ மற்றும் 300 இதர பட்டப்படிப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன.

* சேலம் மண்டலத்தில் 47 பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் 45 டிப்ளமோ இடங்கள் உள்ளன.

* மதுரை மண்டலத்தில் 20 பொறியியல் பட்டப்படிப்பு, 51 டிப்ளமோ மற்றும் 37 இதர பட்டப்படிப்பு இடங்கள், திருநெல்வேலி மண்டலத்தில் 66 பொறியியல் பட்டப்படிப்பு, 22 டிப்ளமோ மற்றும் 93 இதர பட்டப்படிப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன.

* சென்னை MTC மண்டலத்தில் 123 பொறியியல் பட்டப்படிப்பு, 237 டிப்ளமோ மற்றும் 19 இதர பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. தமிழ்நாடு SETC மண்டலத்தில் 30–30 இடங்கள் பொறியியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் இதர பட்டப்படிப்புகளுக்காக ஒவ்வொன்றாக வழங்கப்படுகின்றன.

* மொத்தமாக, 458 பொறியியல் பட்டப்படிப்பு, 561 பொறியியல் டிப்ளமோ மற்றும் 569 இதர பட்டப்படிப்பு இடங்கள் பயிற்சிக்காக திறந்துள்ளன.

கல்வித்தகுதி:

* மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முதல் வகுப்பில் தேர்ச்சி மற்றும் பொறியியல் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

* பிஏ, பி.எஸ், பி.காம், பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட கலை, அறிவியல், வணிகம் உள்ளிட்டவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: பட்டப்படிப்பு தகுதிகளுக்கு ரூ.9,000 மற்றும் டிப்ளமோ தகுதிகளுக்கு ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
  • தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பு விடுக்கப்படும்.
  • சான்றிதழ் சரிபார்ப்பு திருச்சி மண்டல அலுவலகத்தில் நடைபெறும்.
  • எந்தவொரு எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் இல்லை.

எப்படி விண்ணப்பிப்பது? பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ தகுதிப்பெற்றவர்கள் https://nats.education.gov.in/ என்ற தொழிற்பயிற்சி இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

Read more: கரூர் மரண சம்பவத்திற்கு காரணம் என்ன..? விஜய் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்த காவல்துறை..!!

English Summary

Vocational training in the Tamil Nadu transport sector.. 1,588 vacancies..!!

Next Post

கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டை..!! கூட்டத்துடன் கூட்டமாக வேடிக்கை பார்த்த கொலையாளி..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Sun Sep 28 , 2025
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வாசுதேவன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமாரி. இவர் தெரிந்தவர்களுக்கு மட்டும் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் கொண்டிருந்தார். அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவருக்கு ரூ.2 லட்சம் வட்டிக்கு கொடுத்திருந்தார். ஆனால், சம்பத் பணத்தை திரும்பக் கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்த நிலையில், காலதாமதமாக சிறுக சிறுக அசல் தொகையை மட்டும் முழுமையாக கட்டி முடித்துள்ளார். அசல் தொகையைப் பெற்ற […]
Thiruvannamalai 2025

You May Like