அதிகாலையிலேயே அதிர்ச்சி..!! அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!! அப்பளம் போல் நொறுங்கிய கார்..!! 4 பேர் துடிதுடித்து பலி..!! ஓசூரில் சோகம்..!!

Accident 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஒரு காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இன்று அதிகாலை நேரத்தில் ஓசூர் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, அடையாளம் தெரியாத ஒரு வாகனம் மீது ‘பிக்கப்’ வேன் ஒன்று திடீரென மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக சாலையில் சிறிது குழப்பம் ஏற்பட்ட நிலையில், அதே சமயம் அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு சரக்கு லாரி, ஏற்கனவே விபத்தில் சிக்கியிருந்த வாகனங்கள் மீது மீண்டும் மோதியது.

இந்த தொடர் விபத்தில், பிக்கப் வேனுக்கும், சரக்கு லாரிக்கும் இடையே ஒரு கார் சிக்கி, அப்பளம்போல் நொறுங்கியது. காரின் முன்பகுதி மற்றும் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்ற 3 பேர் யார், அவர்கள் குறித்த முழு விவரங்கள் என்ன என்பது உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கோர விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டுநர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த தொடர் விபத்து, நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதுடன், அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : கவர்ச்சி புகைப்படம்..!! உல்லாசத்திற்கு சென்ற இளைஞர்..!! வீட்டை திறந்து பார்த்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி..!! சென்னையில் பயங்கரம்..!!

CHELLA

Next Post

சென்னை Amazon நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..? உடனே அப்ளை பண்னுங்க..!!

Sun Oct 12 , 2025
பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில், சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு டிகிரி முடித்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல துறைகளில் அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது, […]
Amazon 2025

You May Like