fbpx

மிதக்கும் சென்னை…! தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து 1,500 தூய்மை பணியாளர்கள் சென்னை வருகை…!

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னையை விட்டு விலகி சென்றது‌. சென்னையில் இருந்து 170 கி.மீ. வடக்கு நோக்கி விலகிச் சென்றது மிக்ஜாம் புயல். ஆந்திராவின் பாபட்லாவிற்கு தெற்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் மிதக்கிறது. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Vignesh

Next Post

இரு கரம் கூப்பி அழைக்கிறேன்...! தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள்வோம்...! முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

Tue Dec 5 , 2023
அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அண்மைக் காலத்தில் சந்தித்திராத மோசமான புயலை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். 2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, மிக்ஜாம் புயல் காரணமாக’ இடைவிடாத பெருமழையாக எங்கெங்கும் கொட்டித் தீர்த்திருக்கிறது. முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் உயிர்ச்சேதம் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. […]

You May Like