2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் சுமார் ரூ.4000 வரை விலை குறைந்தது.. அதே போல் நேற்று முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்தது..
சென்னையில் இன்று காலை மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைந்தது.. ஆனால் இன்று மாலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ. 11,300க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.90,400-க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று காலை குறைந்த நிலையில் மாலையில் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
எனினும் இன்று மாலை நிலவரப்படி வெள்ளி விலையில் மாற்றமில்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..
Read More : மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா..? இனி எங்கும் அலைய வேண்டாம்.. டக்குனு வேலை முடியும்..!!



