இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை.. தேர்வு, நேர்காணல் கிடையாது..! உடனே விண்ணப்பிங்க..

post office 2025

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் India Post Payments Bank (IPPB)-ல் அசிஸ்டண்ட் மேனேஜர் (Assistant Manager) மற்றும் ஜூனியர் அசோசியேட் (Junior Associate) ஆகிய பதவிகள் நிரப்பப்படுகிறது. தேசிய அளவில் மொத்தம் 309 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு: 20 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூனியர் அசோசியேட் பதவிக்கு மட்டும் 32 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:

* அசிஸ்டண்ட் மேனேஜர் மற்றும் ஜூனியர் அசோசியேட் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும்.

* மேலும், மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

* ஜூனியர் அசோசியேட் பதவிக்கு அஞ்சல் துறை ஊழியர்களில் நிலை 4-இன் அடிப்படையில் பணி செய்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கு அஞ்சல் துறை ஊழியர்கள் விண்ணப்பிக்க இயலாது.

தேர்வு செய்யப்படும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • கிளை வாரியாக (Zone/Branch-wise) ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
  • இந்த ஆட்சேர்ப்பு முறையில் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதார்கள் அதிகரிக்கும் நிலையில், ஆன்லைன் தேர்வு/ குழு கலந்துரையாடல்/ நேர்காணல் ஆகியவை நடத்த வங்கிக்கு உரிமை உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் அரசு ஊழியர்கள் https://ippbonline.bank.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2025.

Read more: உங்கள் மகள் பெயரில் மாதம் ரூ.2 ஆயிரம் டெபாசிட் செய்தால் ரூ.11 லட்சம் கிடைக்கும்..! வட்டி மட்டும் இவ்வளவா..?

English Summary

Job at India Post Payments Bank.. No exam, no interview..! Apply now..

Next Post

Breaking : தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்..!

Thu Nov 13 , 2025
அகவிலைப்படி என்பது விலையேற்றத்தால் ஊழியர்களின் வாங்கும் சக்தி குறைவதை ஈடு செய்யும் ஒரு பணப்பலன் ஆகும்.. மத்திய அரசு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை உயர்த்தி வருகிறது.. அந்த வகையில் மாநில அரசுகளும் மத்திய அரசை பின்பற்றி அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்ந்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 55% ஆக இருந்த அகவிலைப்படி 58% உயர்த்தி […]
stalin money

You May Like