நாட்டிலேயே 3-வது அதிக மக்கள் தொகை கொண்ட பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த 6 மற்றும் 11ஆம் தேதி என இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு சிறப்பாக நிறைவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை சற்று முன் தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து தொகுதிவாரியான EVM வாக்குகள் எண்ணப்படும்.
இந்த முறை, பீகார் தேர்தலில் 67% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை எப்போதும் இல்லாத அளவிலான அதிக வாக்குப்பதிவு இது. மேலும், இந்த தேர்தலைப் பொறுத்தவரை எந்தப் புகாரோ, எதிர்ப்போ இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அரசியல் நிலைமையில் வேகமான மாற்றங்கள் பதிவாகின. சமீபத்திய முன்னிலை நிலவரங்களின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 107 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில், மகாகத்பந்தன் 80 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜன் சுராஜ் கட்சியும் 5 இடங்களில் ஆரம்பகட்ட முன்னிலையைப் பெற்று போட்டியை சுவாரஸ்யமாக்கியுள்ளது.
இருப்பினும், வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்திலும் மாறும் என்பதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பது பிற்பகல் நேரத்தில்தான் தெளிவாகும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் மாறும் முன்னிலை நிலவரங்களால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
Read more: BEL நிறுவனத்தில் வேலை.. பொறியியல் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட் வாய்ப்பு..! உடனே கிளம்புங்க..



