வகுப்பறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பயன்படுத்தப்படும் வண்ண விளையாட்டு மணலில் புற்றுநோயை உண்டாக்கும் கனிமத்தின் தடயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா முழுவதும் சுமார் 70 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நெருக்கடி நியூசிலாந்திலும் பரவியுள்ளது, இது அவசரகால ஆய்வுகள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே அதிகரித்து வரும் பதட்டத்தைத் தூண்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட பொருட்களில், Active Sandtub 14-பீஸ் சாண் கேஸ்டில் கட்டும் செட் மற்றும் நீலம், பச்சை மற்றும் பிங்க் மேஜிக் சாண் ஆகியவை கிரைசோடைல் (Chrysotile) மற்றும் ட்ரெமோலைட் (Tremolite) அஸ்பெஸ்டாஸ் கொண்டதாக தெரியவந்தது. இந்த கனிமங்கள் முன்பு கட்டுமான பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது மிகவும் தீவிரமான நீண்டகால சுகாதார விளைவுகளினால் தடையிடப்பட்டுள்ளன. அஸ்பெஸ்டாஸ் நுண்ணறுக்கைகள் தொற்றும்போது, அவை உடலில் உள்ள நுரையீரலுக்கு ஒட்டிக் கொண்டு பல தசாப்தங்கள் கழித்தும் புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
முதற்கட்ட சோதனைகளில் மாசுபாடு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சில்லறை விற்பனையாளர்களான Kmart மற்றும் Target அவசரமாக திரும்பப் பெறுதல்களை அறிவித்தன. இதனை தொடர்ந்து ACT அரசாங்கம் பள்ளிகளை மூட உத்தரவிட்டது. அனைத்து பள்ளிகளிலிருந்தும் ஆரம்பகால சோதனைகள் “காற்றில் உள்ள ஆஸ்பெஸ்டாஸுக்கு எதிர்மறையாக” இருப்பதைக் காட்டியுள்ளன,
ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), ஆஸ்பெஸ்டாஸ் இழைகள் காற்றில் பரவும் அல்லது உள்ளிழுக்கும் அளவுக்கு மெல்லியதாக மாறும் ஆபத்து குறைவு என்று கூறியது. மணலுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்த நேரத்தில் மருத்துவ மதிப்பீடு தேவையில்லை என்பதையும் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இன்னும் விரிவான அறிவியல் சோதனைக்காக காத்திருப்பதாகவும், இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற கவலைகள் எழுப்பப்பட்டதை அடுத்து, நியூசிலாந்தில் குறைந்தது இரண்டு பள்ளிகளாவது சோதனைக்காக மூடப்படும் என்று நியூசிலாந்து ஹெரால்டு தெரிவித்துள்ளது. மணல் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவிட்டு, உரிமம் பெற்ற நிபுணர்கள் மூலம் பாதுகாப்பாக அகற்றுவதை உறுதி செய்யுமாறு நியூசிலாந்தின் வணிகம், புதுமை மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.



