3-வது கணவரை விவாகரத்து செய்த பிரபல தென்னிந்திய நடிகை.. சிங்கிளாக இருப்பதாக அறிவிப்பு..!

meera vasudevan

பிரபல தென்னிந்திய நடிகை மீரா வாசுதேவன், தனது 3-வது கணவர் விபின் புதியங்கத்திடம் இருந்து விவாகர்த்து பெற்றதாக அறிவித்துள்ளார். 2024 மே மாதத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகள், சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். அவர்களின் விவாகர்த்து செய்திகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரா வசுதேவன் தனது விவாகர்த்தை ‘அதிகாரப்பூர்வமாக’ அறிவித்ததிலிருந்து, அது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.


மீரா வாசுதேவன் நவம்பர் 16 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அந்த பதிவில் கருத்துரைகளை (comments) முடக்கியிருந்தார். தனது பதிவில் “ நான், நடிகை மீரா வாசுதேவன்(@officialmeeravasudevan), ஆகஸ்ட் 2025 முதல் நான் அதிகாரப்பூர்வமாக சிங்கிளாக இருப்பதைக் அறிவிக்கிறேன். என் வாழ்க்கையின் மிக அற்புதமான மற்றும் அமைதியான கட்டத்தில் இருக்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்..

மீரா வாசுதேவனின் மூன்றாவது கணவர் விபினுடன் நடைபெற்ற திருமணம் ஒரு வருடம் கூட முடிவடையாமல் விவாகர்த்தில் முடிந்துள்ளது. இருவரும் கடந்த ஆண்டு மே மாதத்தில் கோயம்புத்தூரில் திருமணம் செய்து கொண்டனர். ‘குடும்பவிளக்கு’ என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பில் சந்தித்ததே அவர்களின் அறிமுகம். சக நடிகராக தொடங்கிய உறவு பின்னர் காதலாக மாறியது. விபின் பாலக்காட்டைச் சேர்ந்தவர். அவர் ‘குடும்பவிளக்கு’ உட்பட பல டி தொடர்களுக்கு சினிமாடோகிராஃபராக பணியாற்றியுள்ளார். பல ஆவணப்படங்களையும் எடுத்து உள்ளார்.

அறிவிப்பை வெளியிட்டதும், மீரா தனது சமூக வலைதளங்களில் இருந்து விபினுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும், வீடியோக்களையும், திருமணப் படங்களையும் உட்பட அனைத்தையும் அகற்றிவிட்டார்.

மீரா வாசுதேவன்முந்தைய திருமணங்கள்

விபினை திருமணம் செய்வதற்கு முன், மீரா வாசுதேவன்நடிகர் ஜான் காக்கன் என்பவரை திருமணம் செய்து கொண்டிருந்தார். இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற ஒரு மகன் உள்ளார். இந்தத் திருமணம் 2012 முதல் 2016 வரை நான்கு ஆண்டுகள் நீடித்தது.

ஜான் காக்கனுக்கு முன், அவர் விஷால் அகர்வால் என்பவரை 2005 முதல் 2010 வரை ஐந்து ஆண்டுகள் திருமணம் செய்து கொண்டிருந்தார்.

மீரா வாசுதேவனின் திரைவாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நடிகை மீரா வசுதேவன் சமீபத்தில் தனது கலைவாழ்க்கையில் ஒரு பெரிய சாதனையை கொண்டாடினார் — சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் 25 ஆண்டுகள் நிறைவு. ஏப்ரல் மாதத்தில், இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள Instagram-ல் பதிவு செய்து, “25 years as an actress and artist” என்று நன்றியுடன் குறிப்பிட்டார்.

மீரா பல மொழிகளில் நடித்துள்ளார். ஆனால், மலையாளத் திரையுலகில் அவர் பெற்ற அன்பு மிகுந்தது. ’ப்ளெஸ்ஸி இயக்கிய ‘தன்மாத்திர’ படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒருவன், ஏகாந்தம், காக்கி, பச்சமரத்தனில் போன்ற பல குறிப்பிடத்தக்க மலையாள படங்களில் நடித்தார். பின்னர் அவர் தொலைக்காட்சி தொடர்களில் அதிகமாக பணியாற்ற ஆரம்பித்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு சுமார் 1.15 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

Read More : ஐ.நா., குழந்தைகள் நல அமைப்பின் இந்தியா தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!.

RUPA

Next Post

“மிகுந்த மன வேதனை அடைந்தேன்..” சவுதியில் 42 இந்தியர்கள் உயிரிழந்த விபத்து.. விஜய் இரங்கல்..!

Mon Nov 17 , 2025
சவுதி அரேபியாவின் மதீனா அருகே இன்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் […]
saudi accident vijay

You May Like