Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1600 உயர்வு..! நகைப்பிரியர்கள் ஷாக்..!

jewels nn

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை உயர்வதும், குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் நேற்று ஒரு சவரனுக்கு ரூ.1,120 குறைந்தது..

இந்த நிலையில் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. அதன்படி இன்று காலை ரூ.100 உயர்ந்த நிலையில் தற்போது மாலையில் ரூ. 100 உயர்ந்து ரூ.11,600க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்த நிலையில் தற்போது மாலையும் ரூ.800 உயர்ந்து ரூ. 92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1600 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.. அதன்படி இன்று காலை ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 உயர்ந்து ரூ.173க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,73,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி.. கோவையில் பிஎம் கிசான் 21-வது தவணையை விடுவித்தார் பிரதமர் மோடி..!

RUPA

Next Post

Breaking : மீண்டும் பீகார் முதல்வாராகிறார் நிதிஷ்குமார்! நாளை பதவியேற்பு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Wed Nov 19 , 2025
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்… பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யபப்ட்டார், இதன் மூலம் நாளை பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார்.. நிதிஷ் குமார் மாலையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை முறையாக கோர உள்ளார்.. 75 வயதான […]
686cc6e0ef0b5 cm nitish kumar 082059341 16x9 1

You May Like