கொட்டித் தீர்த்த கனமழை..!! 15 நாட்களில் 50% உயர்ந்த தக்காளி விலை..!! எப்போது விலை குறையும்..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

tomato 2

சாதாரண குடும்பங்களின் மாத பட்ஜெட்டை தலைகீழாக மாற்றும் வகையில், இந்தியாவில் தக்காளி விலை கடந்த சில வாரங்களில் திடீரென உச்சத்தை அடைந்துள்ளது. அக்டோபர் மாதம் பெய்த மிக கனமழையின் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதமே, இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.


அரசு புள்ளி விவரங்களின்படி, நாட்டின் சில்லறை சந்தையில் கடந்த 10 முதல் 15 நாட்களுக்குள் மட்டும் தக்காளி விலை சுமார் 50% வரை அதிகரித்துள்ளது. அக்டோபர் 19 முதல் நவம்பர் 19 வரையிலான ஒரு மாத காலத்தில், இந்திய அளவிலான சராசரிச் சில்லறை விலை ஒரு கிலோவுக்கு ₹36-லிருந்து ₹46 ஆக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக 27% அதிகரிப்பு ஆகும்.

இதில், சண்டிகர் போன்ற மாநிலங்களில் விலை 112% வரை எகிறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் மாதச் சராசரி உயர்வு 40% க்கும் மேல் பதிவாகியுள்ளது. தக்காளி வரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மகாராஷ்டிராவில் மொத்த விற்பனை விலை 45% அதிகரித்துள்ளது. வட இந்தியாவின் மிகப்பெரிய விநியோக மையமான டெல்லியில் கூட மொத்த விலை 26% உயர்ந்துள்ளது.

சந்தையில் தரமான தக்காளியின் சில்லறை விற்பனை விலை தற்போது ஒரு கிலோவுக்கு ₹80-ஐ சுற்றி விற்பனையாகிறது. அதிகப்படியான மழை காரணமாகவே இந்தக் கடுமையான சப்ளை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசாம்பூர் தக்காளி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அசோக் கோஷிக் கூறுகையில், “கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்து டெல்லி ஆசாம்பூர் சந்தைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை கடந்த வாரம் பாதியை காட்டிலும் அதிகமாக குறைந்துவிட்டது” என்று கூறினார்.

மேலும், தற்போது நாடு முழுவதும் திருமண சீசன் கோலாகலமாக நடைபெறுவதாலும், வரவிருக்கும் ஆண்டின் இறுதி கொண்டாட்டங்களாலும், தக்காளியின் தேவை சந்தையில் மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என்றும், விலை இன்னும் சில காலத்திற்கு அதிக அளவிலேயே நீடிக்கும் என்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More : “அவன் ஊருக்கு போயிட்டான் சீக்கிரம் வாடா”..!! கள்ளக்காதலனுடன் ஜாலி ரெய்டு..!! நேரில் பார்த்த கணவன்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!!

CHELLA

Next Post

பழைய வாகனங்களுக்கு இனி பெரிய செலவு..!! ரூ.3,500-இல் இருந்து ரூ.25,000ஆக உயர்ந்த தகுதிச் சான்றிதழ் கட்டணம்..!!

Thu Nov 20 , 2025
இந்திய சாலைகளில் நிலவும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒரு கடுமையான நிதிச் சுமையை அறிமுகப்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களை வைத்திருக்கும் உரிமையாளர்கள், இனிமேல் வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய அறிவிக்கையின்படி, பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் செலவு, பல மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அமைச்சகம் வாகனங்களின் வயதின் அடிப்படையில் கட்டணப் பிரிவுகளைத் […]
Traffic 2025 1

You May Like