பயம் காட்டும் டிட்வா புயல்..!! மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை..!!

Marina Beach 2025

வட தமிழகத்தை நோக்கி ‘டிட்வா’ புயல் நெருங்கி வருவதன் காரணமாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


‘டிட்வா’ புயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இன்று (நவம்பர் 30) திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை உட்பட மேலும் 9 மாவட்டங்களுக்கு மிகப் பலத்த மழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையின் அடையாளமான மெரினா கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், மெரினா கடற்கரைப் பகுதிக்குள் மக்கள் செல்ல முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்குள் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புயலின் தீவிரம் குறையும் வரை இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிகிறது.

Read More : நாளை முதல் ரூல்ஸ் மாறுது..!! இனி புதிய வாகனங்களை RTO அலுவலகத்திற்கு கொண்டு செல்ல தேவையில்லை..!!

CHELLA

Next Post

பிரதமர் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.18,000 வரை ஊக்கத்தொகை...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Sun Nov 30 , 2025
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வரும் 08.12.2025 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு பொதுத்துறை மற்றும் பிரபல முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் சட்டம், 1961-ன் கீழ் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்கள். 10-,ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, […]
money e1749025602177

You May Like