துரோகத்தின் சம்பளம் மரணம்..!! கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கொன்று செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த கணவன்..!! கோவையில் பயங்கரம்..!!

Crime 2025

திருமண உறவில் இருக்கும்போது கணவன் அல்லது மனைவி மற்ற ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் கள்ளக்காதல் விவகாரங்கள், உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், இது பல சமயங்களில் விபரீத விளைவுகளையும் கொடூரமான கொலைச் சம்பவங்களையும் ஏற்படுத்துகின்றன. அப்படியான ஒரு அதிர்ச்சிச் சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது.


மனைவியின் திருமணத்தை மீறிய உறவை நிறுத்துமாறு கணவன் பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கொலை செய்துவிட்டு, சடலத்துடன் செல்ஃபி எடுத்து அதை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மனைவி, வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் பாலமுருகனுக்குத் தெரிய வந்த நிலையில், அவர் தனது மனைவியை கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால், மனைவி தனது கள்ள உறவை கைவிடாமல் தொடர்ந்து நீடித்ததால், பாலமுருகன் மிகுந்த ஆத்திரமடைந்தார்.

இந்த ஆத்திரத்தில், அவர் தனது மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர், அவர் தனது மனைவியின் சடலத்தின் அருகே செல்ஃபி எடுத்து, அதைப் பதற்றமே இல்லாமல் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார்.

இந்தக் கொடூரமான புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாலமுருகனின் மனைவியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, கொலையாளியான பாலமுருகனை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாகப் பல நாட்களாகவே பாலமுருகன் தனது மனைவியைக் கண்டித்ததாகவும், அவர் உறவைத் துண்டிக்க மறுத்த ஆத்திரத்திலேயே இந்தக் கொடூரச் செயலைச் செய்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : விண்ணைத் தொட்ட காய்கறி விலைகள்..!! ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.140..!! தக்காளி, வெங்காயம் எவ்வளவு தெரியுமா..?

CHELLA

Next Post

இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளது...! முதல்வர் ஸ்டாலின் உறுதி...!

Mon Dec 1 , 2025
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்: டிட்வா புயல் காரணமாக நமது அண்டை நாடான இலங்கை பேரழிவைச் சந்தித்துள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் அவதியுறுகின்றனர். இந்த இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை மக்களின் இந்த […]
tamilnadu cm mk stalin

You May Like