MGR, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் வந்த செங்கோட்டையன் இப்படி செய்யலாமா..? – சசிகலா விரக்தி..

sasikala sengottaiyan

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா, அங்கு உறுதிமொழி ஏற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.

அவர் பேசுகையில், “ஒருவர் மீது கோபம் இருக்கிறது என்பதற்காக பெரிய முடிவுகளை அவசரப்பட்டு எடுக்கக் கூடாது. மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் வந்தவர்கள் இதுபோலச் செய்வதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.

அதிமுகவை அமித் ஷா தான் ஒருங்கிணைப்பாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அரசியல் கட்சியினர், என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படி தேர்தல் வியூகம் வகுக்கிறார்கள் என்பதெல்லாம் தேர்தல் நேரத்தில் தெரியவரும்” எனத் தெரிவித்தார்.

Read more: “தேனி சென்றால் OPS.. கோபி சென்றால் செங்கோட்டையன்.. டெல்டா சென்றால் டிடிவி..” சொந்த கட்சியினரை திட்டி EPS பிரச்சாரம் செய்கிறார்..!! உதயநிதி கிண்டல்..

English Summary

Can Sengottaiyan, who came under the guidance of MGR and Jayalalithaa, do this? – Sasikala

Next Post

விமானிகளின் ஓய்வு விதியை வாபஸ் பெற்ற DGCA! இண்டிகோ குழப்பத்திற்கு மத்தியில் புதிய உத்தரவு!

Fri Dec 5 , 2025
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.. இந்த நிலையில் விமானப் பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு குறித்த தனது வழிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றது. தகுதிவாய்ந்த ஆணையத்தின் (CA) ஒப்புதலைத் தொடர்ந்து, முந்தைய உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக […]
indigo 1

You May Like