சக மாணவனின் தொண்டையை கத்தியால் அறுத்த மாணவன்: கோபம், விரக்தியை சமாளிக்க குழந்தைகளுக்கு எப்படி உதவுவது?

child behaviour 1 1

மகாராஷ்டிராவில் ஒரு பள்ளி வகுப்பறையில், ஒரு மாணவர் தனது வகுப்பு தோழரின் கழுத்தை அறுத்த சம்பவம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள், குழந்தைகள் தங்களின் கோபம் மற்றும் ஏமாற்றத்தை கையாள முடியாமல் போகும் நிலையை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது “ இந்த வகை வன்முறை நடத்தை என்பது பிறவியிலேயே குற்ற மனப்பான்மை கொண்டதன் விளைவு அல்ல. மாறாக, அதிகமான உணர்ச்சி அழுத்தங்களை சமாளிக்கத் தெரியாமல், அதற்கு தவறான முறையில் வெளிப்படும் ஒரு எதிர்வினை தான். எனவே, ஆரம்ப கட்ட தலையீடு, உணர்ச்சி கட்டுப்பாடு (emotional regulation) கற்றுக் கொடுப்பது, மற்றும் பெற்றோர் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்..” என வலியுறுத்துகின்றனர்.

குழந்தைகளுக்கு அமைதியாக இருப்பதை கற்றுக் கொடுப்பது

நிபுணர்கள் மேலும் கூறுவதாவது, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் பிறவியிலேயே கிடைப்பதல்ல; அது கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையே பின்பற்றுகிறார்கள். ஆகவே, பெரியவர்கள் அமைதியான முறையில் பதிலளிப்பதன் மூலம் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதோடு, கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளில் கோபம் ஏன்?

குழந்தைகளில் ஏற்படும் திடீர் கோப வெடிப்புகள் (tantrums) பெரும்பாலும் ஒரு தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதபோது உருவாகின்றன. அந்த நேரங்களில், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆழ்ந்த மூச்சு இழுத்து விடுதல் (deep breathing), சிறிது நேரம் அமைதியாக இருப்பது, தங்களின் உணர்ச்சிகளை வார்த்தைகளில் சொல்ல கற்றுக்கொள்வது போன்ற அமைதிப்படுத்தும் முறைகளைப் பயிற்சி செய்ய உதவ வேண்டும்.

மொத்தத்தில், குழந்தைகளின் மனநலத்தையும் உணர்ச்சி நலத்தையும் கவனிப்பது, இவ்வகை வன்முறை சம்பவங்களைத் தடுக்கும் முக்கிய வழி என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் சொல்லப்படுவது குழந்தைகளின் கோபம் மற்றும் உணர்ச்சிகளை ஆரோக்கியமான முறையில் கையாள கற்றுக் கொடுப்பது பற்றிதான். அதை தெளிவாகப் பார்ப்போம்:

குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வை கொடுப்பது

குழந்தைக்கு கோபம் வந்தால், அவர்களின் கைகளை பிடித்து, சேர்ந்து மெதுவாக மூச்சு இழுத்து விட சொல்ல வேண்டும்.. “இப்போது நீ கோபமாக இருக்கிறாய்.. அது பரவாயில்லை” என்று சொல்வது, குழந்தைக்கு நான் புரிந்துகொள்ளப்படுகிறேன், நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற உணர்வை தருகிறது.

குழந்தைகள் அமைதியாக இருக்க உதவும் சில பயிற்சிகள்

மனநல மருத்துவர் கரோலின் வெப்ஸ்டர்-ஸ்ட்ராடன் கூறும் சில முறைகள்:

நல்ல சுய உரையாடல் (positive self-talk) கற்றுக் கொடுப்பது.. அதாவது “நான் அமைதியாக இருக்க முடியும்” போன்ற வார்த்தைகளை சொல்லிக் கொடுப்பது.. பாதுகாப்பான அல்லது மகிழ்ச்சியான இடங்களை நினைத்துப் பார்க்கச் செய்வது..

உணர்ச்சி அளவுகோல் போன்ற காட்சி உதவிகளை பயன்படுத்தி கோபம் எப்போது உயரத் தொடங்குகிறது என்பதை குழந்தை அறிய உதவுவது.. உணர்ச்சிகளுக்கு சரியான வார்த்தைகள் கற்றுக் கொடுப்பது.. குழந்தைகள் தங்களின் உணர்ச்சிகளை சரியான வார்த்தைகளில் சொல்ல கற்றுக்கொண்டால், அவர்கள் கோபம் அல்லது ஏமாற்றத்தை வன்முறையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு குறையும்.

பென் ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் மார்க் கிரீன்பெர்க் கூறுவதாவது,
அமைதி, ஏமாற்றம், கோபம், வருத்தம் போன்ற அடிப்படை உணர்ச்சி சொற்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியம். பெரியவர்கள் உணர்ச்சிகளை பெயரிட்டு உறுதிப்படுத்த வேண்டும்

பெற்றோரும் ஆசிரியர்களும், குழந்தைகளில் உணர்ச்சி வெளிப்படும் போது அதை பெயரிட்டு, நேர்மறையாக உறுதிப்படுத்த வேண்டும். உதாரணமாக: “உனக்கு ஏமாற்றமாக இருக்கிறது, ஆனாலும் நீ அமைதியாக கையாள்கிறாய். அது சுலபமல்ல” என்று சொல்லலாம். இதனால், குழந்தைகள் உடல் வன்முறைக்கு பதிலாக, தங்களின் உணர்ச்சிகளை முறையாகவும் கட்டுப்பாடுடன் வெளிப்படுத்தும் வழிகளை கற்றுக்கொள்வார்கள்.

Read More : கவனம்! இந்த பரிவர்த்தனைகளை செய்தால், கணவன் & மனைவி இருவருக்கும் வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்படும்.!

RUPA

Next Post

கணவர் கண்முன்னே காட்டுக்குள் வைத்து மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர்..!! தூத்துக்குடியில் துயரம்..!!

Tue Dec 16 , 2025
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் போன்ற பல தனியார் நிறுவனங்களில், அசாம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலைக்குச் சேர்ந்தனர். […]
Rape 2025 2 1

You May Like