இன்று EPS-க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!! தவெகவில் இணையும் அதிமுகவின் முக்கிய புள்ளிகள்..!! செங்கோட்டையன் போட்ட மெகா பிளான்..!!

vijay tvk sengottaiyan 1

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த சரளைப் பகுதியில் நடைபெறுகிறது. நடிகர் விஜய் பங்கேற்கும் இந்த நிகழ்விற்காக ஒட்டுமொத்த கொங்கு மண்டலமும் த.வெ.க தொண்டர்களின் வருகையால் திணறி வருகிறது.


இன்று காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்தப் பொதுக்கூட்டத்திற்காக சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான திடல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 ஏக்கர் கார்களுக்கும், 20 ஏக்கர் இருசக்கர வாகனங்களுக்கும் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வாகன நிறுத்தம் தயார் செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு நுழைவுச் சீட்டு (Pass) அல்லது கியூஆர் கோடு (QR Code) முறை பின்பற்றப்படும். ஆனால், இன்றைய கூட்டத்திற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் ஏதுமில்லை என அறிவிக்கப்பட்டதே கூட்டத்தின் அலைமோதலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதன் விளைவாக, நள்ளிரவு 12 மணி முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் பேருந்துகள் மற்றும் வேன்கள் மூலம் வரத் தொடங்கினர்.

அதிகாலை 6 மணி நிலவரப்படி, சரளைப் பகுதி முழுவதும் த.வெ.க தொண்டர்களால் நிரம்பி வழிகிறது. விடிய விடியக் குவிந்த தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டு வருவதால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் சில மணிநேரங்கள் உள்ள நிலையில், தொண்டர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தான், தன்னுடன் தொடர்பில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்க செங்கோட்டையன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமமுகவில் இருக்கும் நிர்வாகிகளையும் தவெகவில் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் அதிர்ச்சியில் உள்ளனர்.

Read More : மருத்துவர்களே கைவிட்டாலும் கவலை வேண்டாம்..!! இந்த சக்திவாய்ந்த கோயில்களுக்கு சென்று வந்தால் குழந்தை வரம் கிடைக்கும்..!!

CHELLA

Next Post

ஊரை விட்டு ஓட்டம் பிடித்த கள்ளக்காதல் ஜோடி..!! காட்டுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி..!! நேரில் பார்த்து ஆடிப்போன மக்கள்..!!

Thu Dec 18 , 2025
அரியலூர் மாவட்டம் சின்னமனக்குடி அருகே உள்ள கள்ளக் காடு பகுதிக்கு மாடு மேய்க்கச் சென்றவர்கள், அங்குள்ள மரம் ஒன்றில் ஒரு ஆணும் பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு செய்ததில், சடலங்கள் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தன. அவர்கள் உயிரிழந்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சடலங்களுக்கு அருகே […]
Sex 2025 3

You May Like