எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேறியது விபி ஜி ராம் ஜி மசோதா..!

lok sabha jpg 2 1

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், விபி ஜி ராம் ஜி மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு (MGNREGA) மாற்றாகக் கொண்டுவரப்படவுள்ள, ‘விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதித் திட்டம் (கிராமப்புறம்) (VB-G RAM G) மசோதா, 2025’ மீதான நீண்ட விவாதம் மக்களவையில் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது..


பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 98 உறுப்பினர்களின் பங்கேற்புடன், நள்ளிரவு கடந்தும் விவாதம் நடைபெற்றது. அதிகாலை 1.35 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டதன் மூலம் விவாதம் முடிவுக்கு வந்தது.

எனினும் ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டணியின் கீழ் உள்ள பல எதிர்க்கட்சிகள், VB-G RAM G மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கீழவையில் மசோதாவின் பிரதிகளை கிழித்து, மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி கட்சி, சிபிஐ, சிபிஐ(எம்), ஐயூஎம்எல், சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), என்சிபி-எஸ்சிபி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில், ஜி ராம் ஜி மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த முன்மொழியப்பட்ட சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை (MGNREGA) திறம்பட கலைக்க முயல்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த பெயர் மாற்றத்தை மகாத்மா காந்திக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று வர்ணித்துள்ள எதிர்க்கட்சிகள் , பாஜக அவர் மீது ‘வெறுப்பைக்’ காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

VB-G RAM G மசோதா, 2025, திறமையற்ற உடல் உழைப்பு வேலைகளைச் செய்யத் தயாராக இருக்கும் வயது வந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும், ஒவ்வொரு நிதியாண்டிலும் 125 நாட்கள் ஊதிய வேலைவாய்ப்பை உறுதி செய்ய முன்மொழிகிறது. இது ‘விக்சித் பாரத் 2047’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணக்கமான ஒரு கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பையும் நோக்கமாகக் கொண்டுள்ளது..

Read More : தவெக ஒரு கொலைகார சக்தி.. விஜய்யின் தீய சக்தி விமர்சனத்திற்கு திமுக பதிலடி..!

RUPA

Next Post

கம்பத்தில் ஏறிய தவெக தொண்டன்.. பேச்சை நிறுத்திவிட்டு டென்ஷனான விஜய்..! அடுத்து சொன்ன வார்த்தையால் அதிர்ந்த அரங்கம்..

Thu Dec 18 , 2025
TVK Thondan climbed the pole.. Vijay stopped speaking and became tense..! The next word he said shocked the audience..
vijay 1

You May Like