ரூ.718 கோடி முதலீடு, 663 பேருக்கு வேலைவாய்ப்பு..! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஷ்னைடர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

cm stalin

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அவ்வப்போது முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் 91 ஒப்பந்தங்கள், மற்றும் ஜெர்மனி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பல முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளன.


இந்த நிலையில் தமிழகத்தில் ரூ.718 கோடி முதலீட்டில், 663 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஷ்னைடர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..

இந்த முதலீடு சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள விரிவாக்கத் திட்டங்கள் (brownfield) மற்றும் ஓசூர் (Hosur) நகரில் ஒரு புதிய பசுமைத் திட்டத்தையும் (greenfield) உள்ளடக்கியது, இது மின்சாதனங்கள் மற்றும் ஆற்றல் மேலாண்மைத் துறைகளில் தமிழ்நாட்டின் நிலையை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதலீடு, தமிழ்நாட்டின் தொழில் சூழல், விரைவான அனுமதி, திறமையான பணியாளர்கள் மற்றும் சிறந்த கட்டமைப்பு ஆகியவற்றின் மீது ஷ்னைடர் எலக்ட்ரிக் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக அமைந்துள்ளது..

RUPA

Next Post

பள்ளிக் கூடத்தில் பலான வேலை..!! ஸ்டோர் ரூமில் ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த தலைமை ஆசிரியர்..!! லீக்கான வீடியோ..!!

Thu Dec 18 , 2025
கல்வி கோயில் என்று போற்றப்படும் பள்ளிக் கூடத்தையே தனது முறையற்ற லீலைகளுக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியரின் செயல், சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கான்கேர் மாவட்டம் இந்திரபிரஸ்தா கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த ராஜேஷ் பால் என்ற தலைமை ஆசிரியர், பள்ளியின் ஸ்டோர் ரூமிலேயே பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த வீடியோ ஆதாரத்துடன் பிடிபட்டு தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பள்ளியில் […]
Sex 2025 1

You May Like