அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5-ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன..
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வந்தது.. விசாரணையின் போது அரசியல் கட்சிகளின் ரோடுஷோ பொதுக்கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.. பொதுக்கூட்டங்களை நடத்துவதை முறைப்படுத்தவும், திட்டமிடவும் கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.. எனினும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தவெக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்தது..
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.. அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5-ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் பரிசீலித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஆட்சேபம் இருந்தால் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
Read More : Flash : காலையிலேயே குட்நியூஸ்.. வெள்ளி விலை ரூ.3,000 குறைந்தது.. தங்கம் விலையும் அதிரடி சரிவு..!



