மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (42 – பெயர் மாற்றப்பட்டுள்ளது). அரசுப் பள்ளி ஆசிரியையான இவர், கணவரைப் பிரிந்து தனது மகனுடன் வசித்து வந்தார். கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரு ரயில் பயணத்தின் போது, வீரமணி என்ற கட்டடத் தொழிலாளியுடன் சங்கீதாவிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஊரடங்கு காலத்தில் ஆபாச வீடியோக்களுக்கு அடிமையான இந்த ஜோடி, தங்கள் வக்கிர புத்தியை தீர்த்துக்கொள்ளச் சிறுவர்களை இலக்காகத் தேர்ந்தெடுத்தனர்.
ஆசிரியை சங்கீதா தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். அங்கு படிக்க வந்த 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் சிறுவர்களை ஆசை வார்த்தைகள் கூறித் தனது வலைக்குள் வீழ்த்தியுள்ளார். வீரமணியுடன் சேர்ந்து அந்தச் சிறுவர்களைத் தவறான உறவுக்குப் பயன்படுத்தியது மட்டுமின்றி, அந்தக் கொடூரச் செயல்களை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
ஒருகட்டத்தில் பயந்துபோய் மாணவர்கள் டியூஷனுக்கு வருவதை நிறுத்தியபோது, வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி மீண்டும் மீண்டும் அவர்களை துன்புறுத்தியுள்ளனர். விசாரணையில், சங்கீதா தனது சொந்த மகனையே இத்தகைய மிரட்டல்களால் பலிகடாவாக்கியிருந்தது அதிகாரிகளையே அதிரவைத்தது.
இந்த கொடூரம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என்பதுதான் இதில் முக்கிய திருப்பம். வீரமணி ஒருமுறை போதை மயக்கத்தில் தனது நண்பரிடம் அந்த வீடியோக்களை காட்டியுள்ளார். அதில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நண்பர், மாணவர்களிடம் விசாரித்து உண்மையை கண்டறிந்தார். வீரமணியின் மிரட்டல்களையும் மீறி மாணவர்கள் கரிமேடு காவல் நிலையத்தில் தைரியமாக புகார் அளித்தனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் வீரமணியை மடக்கிப் பிடித்து அவரது மொபைலில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோக்களை தொழில்நுட்ப உதவியுடன் மீட்டெடுத்தனர்.
இதனையடுத்து, மதுரை தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சங்கீதா மற்றும் வீரமணி ஆகிய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இச்ச ம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
Read More : மாதம் ரூ.1,25,000 சம்பளம்..!! கொட்டிக் கிடக்கும் ஆசிரியர் காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!



