தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.. பச்சரிசி, சர்க்கரை, கருப்பு ஆகியவற்றுடன் சில ஆண்டுகளில் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டது.. 4 கிலோ பச்சரிசி, நாட்டுச்சர்க்கரை, பாசிபருப்பு, 300 கிராம் நெய், 1 லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை தரப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.. அரசு ஊழியர்கள், கௌரவ ரேஷன் அட்டைதாரர்கள் தவிர அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பரிசுத்தொகுப்பு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பரிசுத்தொகுப்பு வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச ஆடை வழங்கல் திட்டம் இனி இருக்காது என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.. பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.. பொங்கல் ஆடைகளுக்கு நேரடியாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



