காலை எழுந்தவுடன் காஃபி அல்லது டீ பருகுவதையே நம்மில் பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், 6 முதல் 8 மணி நேர ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு, நமது உடல் இயற்கையாகவே நீர்ச்சத்தை இழந்து வறண்டு போய் இருக்கும். இந்தச் சூழலில், வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுவது என்பது வெறும் தாகம் தணிப்பதற்கான செயல் மட்டுமல்ல; அது நமது ஒட்டுமொத்த உடல் உறுப்புகளையும் தட்டியெழுப்பி புத்துயிர் பெறச் செய்யும் ஒரு இயற்கைச் சிகிச்சையாகும்.
காலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் மிக முக்கியமான பலன் உடனடி நீரேற்றம் ஆகும். பல மணிநேரம் திரவங்கள் இன்றி இருந்த செல்களுக்கும் திசுக்களுக்கும் இது புத்துணர்ச்சியை அளிக்கிறது. குறிப்பாக, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நமது வளர்சிதை மாற்ற விகிதத்தை சுமார் 30 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதன் மூலம் கலோரிகள் திறம்பட எரிக்கப்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு தேவையான ஆற்றல் உடலுக்குக் கிடைக்கிறது.
நமது மூளையின் செயல்பாட்டிற்கும் நீச்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மூளையில் சுமார் 75 சதவீதம் தண்ணீர் இருப்பதால், லேசான நீர்ச்சத்து குறைபாடு கூட கவனச்சிதறல் மற்றும் சோர்வை உண்டாக்கும். காலையிலேயே தண்ணீர் பருகுவது நினைவாற்றலை கூர்மைப்படுத்துவதோடு, மனநிலையைச் சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. அதேபோல், இரவு நேரத்தில் உடல் செல்களைப் புதுப்பிக்கும்போது வெளியேறும் நச்சுக்களை, சிறுநீரகங்கள் மூலம் வடிகட்டி வெளியேற்ற காலை நேர தண்ணீர் ஒரு இயற்கையான ‘டிடாக்ஸ்’ (Detox) முகவராக செயல்படுகிறது.
செரிமான மண்டலத்தை பொறுத்தவரை, தண்ணீர் குடல் இயக்கத்தைத் தூண்டி மலச்சிக்கலை தடுக்கிறது. இது குடலை தயார்படுத்தி, நாம் உண்ணும் காலை உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்ச வழிவகை செய்கிறது. இதுமட்டுமின்றி, சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து சுருக்கங்களை குறைப்பதன் மூலம் முகப்பொலிவை மேம்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை சமநிலைப்படுத்தி, வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை தூண்டுவதன் மூலம் தொற்று நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. குறிப்பாக, காலையில் ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலிக்குப் பெரும்பாலான நேரங்களில் நீர்ச்சத்து குறைபாடே காரணமாக இருப்பதால், எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதன் மூலம் அத்தகைய வலிகளைத் தடுத்து, பொழுதை ஆரோக்கியமாக தொடங்கலாம்.
Read More : ரூ.18 சிகரெட் இனி ரூ.72-க்கு விற்பனை..!! அமலுக்கு வருகிறது புதிய விலை..!! மத்திய அரசு தடாலடி உத்தரவு..!!



