FLASH | மீண்டும் கைது..!! பதறியடித்து வீடியோ வெளியிட்ட சவுக்கு சங்கர்..!! கோர்ட் லீவு.. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் காவல்துறை..!!

Savukku 2026

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய வழக்கு ஒன்றில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படும் இந்தப் புகாரில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


நீதிமன்ற விடுமுறை நாட்களை குறிவைத்து இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம், தான் உடனடியாக ஜாமீன் பெறுவதை தடுக்க அரசுத் தரப்பு திட்டமிட்டுள்ளதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். “எனது அலுவலகத்திற்கு சீல் வைப்பது மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ‘சவுக்கு மீடியா’வின் குரலை ஒட்டுமொத்தமாக ஒடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது” என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில், விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அரசு இத்தகைய அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Subscribe to my YouTube Channel

கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியான சட்டப் போராட்டங்களை சந்தித்து வரும் சவுக்கு சங்கர், அடுத்த ஒன்றரை மாத காலத்திற்கு (40 முதல் 45 நாட்கள்) தன்னையும் தனது குழுவினரையும் முடக்குவதற்கான ஒரு விரிவான திட்டத்தை அரசு வகுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். “இந்த அடக்குமுறைகளுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Read More : எந்த திசையில் பொங்கல் வைக்க வேண்டும் தெரியுமா..? முன்னோர்கள் சொன்ன ரகசியம்..!! காரணம் இருக்கு.. கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..!!

CHELLA

Next Post

அதிமுகவில் வெடித்த அதிகார மோதல்..!! அதிருப்தியில் மாஜி அமைச்சர்கள்..!! புலம்பும் இபிஎஸ்..!! குறுக்கே புகுந்த திமுக..!!

Thu Jan 15 , 2026
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், அதிமுக-வின் கோட்டையாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வழக்கமாக அதிமுக-வுக்கு வலுசேர்க்கும் கொங்கு மண்டலத்தில் ஏற்படக்கூடிய சிறு சரிவுகளை, டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் வாக்குகளை கொண்டு ஈடுகட்டலாம் என்பதே எடப்பாடியின் கணக்காக இருந்தது. ஆனால், தற்போது அந்த மண்டலத்திலேயே மூத்த நிர்வாகிகளுக்கு இடையே வெடித்துள்ள அதிகாரப் போட்டி, […]
Eps

You May Like