பெண்களுக்கு ஜாக்பாட்..!! தமிழ்நாடு அரசின் இலவச தையல் இயந்திர திட்டம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

Sewing Machine 2026

தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்தைச் சுயசார்புடன் அமைத்துக்கொள்ளும் பொருட்டு, ‘சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை’ மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் வழங்கப்படும் இந்தத் திட்டம், வறுமைக்கோட்டிற்குக்கீழ் உள்ள பெண்கள் வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பாக, விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் குறைந்தது 6 மாத காலம் தையல் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் வைத்திருப்பது அவசியமாகும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றுடன், தையல் பயிற்சி சான்றிதழ் மற்றும் தங்களின் நிலையை உறுதிப்படுத்தும் (விதவை/ஆதரவற்றோர்) சான்றுகளை இணைக்க வேண்டும். முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களும், தமிழ்நாட்டில் வசிக்கும் பிற மாநிலப் பெண்களும் உரிய ஆவணங்களுடன் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

தகுதியுள்ள பெண்கள் தங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்கள் அல்லது பொது சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தையல் இயந்திரத்துடன் ஊசிகள், பாபின்கள் மற்றும் நூல் போன்ற உபகரணங்களும் விலையில்லாமல் வழங்கப்படுகின்றன. உழைக்கத் தயாராக இருக்கும் பெண்களுக்கு இத்திட்டம் ஒரு மாபெரும் வாய்ப்பாகும்.

Read More : ஷாக்கிங்..!! தமிழ்நாட்டில் இனி “ஏர் இந்தியா” விமானம் இயங்காது..!! 29ஆம் தேதியே கடைசி..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

CHELLA

Next Post

“சிகிச்சைக்கு பணம் அதிகம் செலவாகுமென்று கொன்றோம்”..!! மரத்திலிருந்து விழுந்த நண்பனை ஆற்றில் அமுக்கி கொலை செய்த சக நண்பர்கள்..!!

Thu Jan 22 , 2026
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாயமான வாலிபரின் வழக்கில், அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை போலீசார் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நண்பனைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, சிகிச்சை செலவுக்குப் பயந்து அவரை நண்பர்களே குளத்தில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. மாகடி தாலுகாவைச் சேர்ந்த 26 வயதான வினோத் குமார், கடந்த ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு கொண்டாட தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது மது […]
Karnataka 2026

You May Like