“மாதம் 1 லட்சம் பென்ஷன்”..!! மியூச்சுவல் ஃபண்டில் கோடீஸ்வரராக இதுதான் மேஜிக் ஃபார்முலா..!!

Mutual Fund SIP 2025

நேரடியாக பங்குச்சந்தையில் இறங்கி ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாகத் திகழ்வதுதான் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீடுகள். நிபுணத்துவம் வாய்ந்த நிதி மேலாளர்கள் மூலம் நமது பணம் சரியான பங்குகளில் முதலீடு செய்யப்படுவதால், நீண்ட காலத்தில் இது நிலையான மற்றும் அதிகப்படியான லாபத்தை ஈட்டித் தருகிறது. குறிப்பாக, மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கும் எஸ்ஐபி (SIP) முறை, நடுத்தர வர்க்கத்தினரைக் கோடீஸ்வரர்களாக மாற்றும் வல்லமை கொண்டது. அந்த வகையில், மியூச்சுவல் ஃபண்ட் மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கான ஒரு எளிய சூத்திரத்தை நிதி ஆலோசகர்கள் முன்வைக்கின்றனர்.


இந்த இலக்கை அடைய ‘ஸ்டெப்-அப் எஸ்ஐபி’ (Step-up SIP) என்ற முறையைப் பின்பற்ற வேண்டும். பிரபல நிதி ஆலோசகர் நிதின் கவுஷிக் இது குறித்துப் பகிர்ந்துள்ள தகவலின்படி, ஒருவர் மாதம் 18,000 ரூபாயை முதலீடு செய்யத் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் அந்தத் தொகையை 6 சதவீதம் உயர்த்தி (Top-up) முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, முதல் ஆண்டு 18,000 ரூபாய் என்றால், அடுத்த ஆண்டு 19,080 ரூபாய் என முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்டுகள் முதலீடு செய்யும் போது, கூட்டு வட்டியின் (Compounding) அபரிமிதமான சக்தியால் சுமார் 2.5 கோடி ரூபாய் அளவிலான பிரம்மாண்டமான நிதியத்தை (Corpus) உருவாக்க முடியும்.

இந்த 20 ஆண்டு காலத்தில் நீங்கள் முதலீடு செய்த அசல் தொகை சுமார் 80 லட்சம் ரூபாயாகத்தான் இருக்கும். ஆனால், சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் உங்களுக்குக் கிடைக்கும் லாபம் மட்டும் 1.5 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும். இவ்வாறு முதிர்வு காலத்தில் சேரும் 2.5 கோடி ரூபாயை, 5 சதவீத வருமானம் தரும் பாதுகாப்பான திட்டங்களில் மறு முதலீடு செய்தாலே, மாதம் 80,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை வாழ்நாள் முழுவதும் வருமானமாகப் பெற முடியும். முறையான ஒழுக்கமும், நீண்ட காலத் திட்டமிடலும் இருந்தால், சாமானியர்களும் தங்களது ஓய்வு காலத்தைப் பொற்காலமாக மாற்ற முடியும் என்பதற்கு இந்த முதலீட்டு முறை ஒரு சிறந்த உதாரணமாகும்.

Read More : நீங்களும் முதலாளி ஆகலாம்..!! தொழில் தொடங்க மானியத்துடன் ரூ.25,00,000 வழங்கும் மத்திய அரசு..!! எப்படி விண்ணப்பிப்பது..?

CHELLA

Next Post

3 பேர் பலி..! பேருந்து டயர் வெடித்ததால் கோர விபத்து..! ஆந்திராவில் பெரும் சோகம்..!

Thu Jan 22 , 2026
ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மாவட்டத்தில் உள்ள சிரிவெல்லா மெட்டா அருகே நடந்த ஒரு கோரமான சாலை விபத்தில், ஒரு பயணிகள் பேருந்து கொள்கலன் லாரி மீது மோதியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு கிளீனர் உயிரிழந்தனர். எனினும் உள்ளூர்வாசிகள் மற்றும் பேருந்து துப்புரவுப் பணியாளரின் உடனடி நடவடிக்கையால், பேருந்தில் இருந்த 36 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். நந்தியால்-அல்லகடா சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.. […]
andhra fire

You May Like