மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்..!! நாளை தமிழ்நாடு முழுவதும் இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது..!!

Tasmac 2025

தமிழகத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் நாளை (பிப்ரவரி 9, திங்கட்கிழமை) போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, சுமார் 3 மணி நேரம் மூடப்படும் என தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பாக, கடந்த 5 நாட்களாக பணியாளர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகப் பணியாளர்களாகவே நீடிக்கும் தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

மேலும், தற்போதுள்ள தொகுப்பூதிய முறையை கைவிட்டு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு முறையான ஓய்வூதிய சலுகைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அரசுத் துறை தற்காலிகப் பணியாளர்கள் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதன் காரணமாகவே, போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நாளை மதிய வேளையில் 3 மணி நேர கடையடைப்புப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள 16-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை நடத்துவதால், நாளை மதிய நேர மது விற்பனை கணிசமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பணியாளர்கள் இன்றி கடைகளை திறக்க முடியாது என்பதால், மாற்று ஏற்பாடுகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இருப்பினும், ஆயிரக்கணக்கான பணியாளர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

Read More : செம குட் நியூஸ்..!! கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியிருக்கீங்களா..? அனைத்தும் தள்ளுபடி..? தமிழ்நாடு அரசு அதிரடி..!!

CHELLA

Next Post

“வெள்ளை உடையில் பெண்.. அடுத்தடுத்து மரணம்”..!! இந்தியாவில் “பேய் ரயில் நிலையம்” எங்கிருக்கு தெரியுமா..?

Sun Feb 8 , 2026
மேற்கு வங்காளத்தின் புருலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ‘பெகுன்கோடர்’ (Begunkodor) ரயில் நிலையம், இந்திய ரயில்வே வரலாற்றிலேயே மிகவும் மர்மமான மற்றும் விசித்திரமான ஒரு இடமாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 42 ஆண்டுகள் ‘பேய்களின் நடமாட்டம்’ இருப்பதாகக் கூறப்பட்டு மூடப்பட்டிருந்த இந்த நிலையம், இன்றும் பல அமானுஷ்ய கதைகளை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் அத்ரா – போஜுதி ரயில் பாதையில் அமைந்துள்ள இந்த நிலையம், 1960-களின் தொடக்கத்தில் சாதாரணமாகவே […]
Train West Bengal 2026

You May Like