தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள 9 பள்ளிகளுக்கு திங்கள்கிழமை அன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. மின்னஞ்சல்கள், அழைப்புகள் மூலம் இந்த மிரட்டல் வந்தது.. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியது. அன்று பிற்பகல் 1:11 மணியளவில் ஒரு வெடிப்பு நிகழும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது..
இந்தச் செய்திகள் காலை 8:30 மணி முதல் 9:00 மணிக்குள் பெறப்பட்டன என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.. அதைத் தொடர்ந்து, அவசரகால நெறிமுறைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டன. காவல் குழுக்கள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையினர் பாதிக்கப்பட்ட பள்ளி வளாகங்களுக்கு விரைந்து அனுப்பப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள் :
லோரெட்டோ கான்வென்ட் பள்ளி, டெல்லி கண்டோன்மென்ட்
கேம்பிரிட்ஜ் பள்ளி, ஸ்ரீனிவாசபுரி
வெங்கடேஸ்வரா பள்ளி, ரோகிணி
கேம்பிரிட்ஜ் பள்ளி, நியூ பிரண்ட்ஸ் காலனி
தி இந்தியன் பள்ளி, சாதிக் நகர்
சிஎம் பள்ளி, ரோகிணி
டிடிஏ பள்ளி, ஐஎன்ஏ
பால் பாரதி பள்ளி, ரோகிணி
அனைத்து இடங்களிலும் முழுமையான தீவிர சோதனை நடத்தப்பட்டது என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சில பள்ளிகளில் மாணவர்களும் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டனர், மற்ற பள்ளிகளில் வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டன. இதுவரை எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
அந்த மிரட்டல் மின்னஞ்சலில் தீவிரவாதக் குறிப்புகளும் இருந்தன. அந்த மின்னஞ்சலில், “டெல்லி காலிஸ்தானாக மாறும். இன்று தியாகி அஃப்சல் குருவின் நினைவாக பிற்பகல் 1:11 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும்.. இன்று பள்ளியில் குண்டு வெடிக்கும். இந்துஸ்தானி பாராளுமன்றத்தில் குண்டு வெடிக்கும்.. பிப்ரவரி 13 @1:11 மணிக்கு நடக்கும்.. மோடி-ஷா-ஜெய்சங்கர் – காலிஸ்தான்வாதிகளின் எதிரிகள்.. பஞ்சாப் இப்போது காலிஸ்தான்.. காலிஸ்தான் தேசிய இராணுவம்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது..
பிப்ரவரி 13 அன்று பிற்பகல் 1:11 மணிக்கு பாராளுமன்றத்தில் ஒரு குண்டுவெடிப்பு நிகழும் என்றும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு அமைப்புகள் இந்த மிரட்டலை தீவிரமாக எடுத்துக்கொண்டன.
காவல்துறை நடவடிக்கை மற்றும் விசாரணை
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தலைநகரில் உள்ள முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடர்வதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : “ எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம்..” யுரேனியம் செறிவூட்டல்.. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை..!



