மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி 30ம் தேதி, இந்தியாவில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது பாடுபட்டு, இன்னுயிரை ஈந்த, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
நாடு சுதந்திரம் பெற்றதில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. 1948 ஜனவரி 30 ஆம் தேதி காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் துக்க நாளாக இது அமைந்தது. அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் நினைவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவரது ஆளுமை மற்றும் பங்களிப்புக்காக மகாத்மா காந்தி மற்றும் பாபு போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தி எப்போதும் உண்மை மற்றும் அகிம்சையின் வழியைப் பின்பற்றினார்.
ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்திலிருந்து நாட்டை விடுவிக்க சத்தியத்தையும் அகிம்சையையும் கடைப்பிடித்து வெற்றி பெற்றார். அவரது ‘அஹிம்சா பர்மோ தர்ம:’ என்ற செய்தி உலகம் முழுவதும் பிரபலமானது. இந்தியா சுதந்திரம் அடைந்த சிறிது காலத்திலேயே மகாத்மா காந்தி இறந்துவிட்டார். ஜனவரி 30, 1948 அன்று மாலை தொழுகைக்குப் பிறகு பிர்லா மாளிகையில் காந்திஜியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இந்த நாள் வரலாற்றில் கருப்பு தினமாக பதிவு செய்யப்பட்டது.
மகாத்மா காந்தியின் நினைவு நாளை தியாகிகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இந்த நாளில், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள காந்திஜியின் சமாதிக்குச் சென்று சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜியின் பங்களிப்பை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவார்கள். இதனுடன், நாட்டின் ஆயுதப் படைகளின் தியாகிகளுக்கும் இந்நாளில் மரியாதை செலுத்தப்படுகிறது. காந்திஜியின் நினைவாகவும், தியாகிகளின் பங்களிப்பிற்காகவும் நாடு முழுவதும் இரண்டு நிமிட இந்நாளில் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.