FLASH | மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை..!! தமிழக மீனவர்கள் 25 பேர் கைது..!! அதிர்ச்சியில் மீனவ குடும்பங்கள்..!!

fisherman arrest

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கடலோர மாவட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களைக் கைது செய்வதும், பல லட்சம் மதிப்புள்ள அவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதும் ஒரு தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.


நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளை வழிமறித்துப் பறிமுதல் செய்ததோடு, அதிலிருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வைத்துத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர், அவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என இலங்கை தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More : “பெண்டாட்டி வந்த நேரம்”..!! எந்த ராசியினருக்கு திருமணத்திற்குப் பின் தொட்டதெல்லாம் பொன்னாகும்..?

CHELLA

Next Post

இருசக்கர வாகனம் மீது சட்டென மோதிய சுற்றுலா வேன்..!! தூக்கி வீசப்பட்டு 5 பேர் துடிதுடித்து உயிரிழப்பு..!! தூத்துக்குடியில் சோகம்..!!

Mon Feb 16 , 2026
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிறுவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விளாத்திகுளம் அருகிலுள்ள பல்லாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் குருசாமி (40). இவர், தனது சகோதரர் முனியசாமியின் மகன்களான சிறுவர்கள் முகிலரசன் (5), சுமித்ரன் (3), மற்றும் தனது சகோதரி முத்துலட்சுமி (48) மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண் ஆகிய நால்வரையும் அழைத்துக்கொண்டு, விளாத்திகுளத்திலுள்ள தனது உறவினர் […]
Accident 2026 1

You May Like