தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.. அப்போது பேசிய அவர் “ 58,000 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. உழவர்களின் வாழ்வாதாரம், வருமானத்தை அதிகரிப்பதே அரசின் நோக்கம். உழவர்களுக்கு 53 லட்சம் தென்னங்கன்றுங்கள் வழங்கப்பட்டுள்ளன.
10,558 சிறு பாசன குளம், ஊரணி, கால்வாய் தூர்வாரி மேம்பாடு செய்யபப்ட்டுள்ளது. கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
நெல் ஜெயராமன் திட்டத்தில் 900 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மண்ணுயிர் காப்போ திட்டத்தில் இதுவரை 21.35 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு, 19.51 லட்சம் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்..
2025-26-ம் ஆண்டில் 12.48 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களை வேளான் துறையில் தொழில் முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன. உரம் விதைகளை வழங்க 1000 உழவர் நல சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய உணவுகளை காக்க 20.80 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதி பெற்றுள்ளனர்.
10 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



