ஆரோக்கியம் குறித்த தேடல் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்களின் ஆலோசனைகளை விட, அனுபவம் என்ற பெயரில் பகிரப்படும் சமூக வலைதளக் குறிப்புகளே பலரையும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், “காலையில் ஒரு குவளை வெந்நீர் குடித்தால் நூற்றுக்கணக்கான நோய்கள் ஓடிவிடும்” என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், வெந்நீர் குடிப்பதன் மூலம் உடல் பருமனை அடியோடு குறைத்துவிடலாம் என்பதற்குப் போதுமான அறிவியல் ஆதாரங்கள் எதுவுமில்லை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புவோர், அதிக கலோரி கொண்ட குளிர்பானங்கள் அல்லது சர்க்கரை கலந்த பானங்களைத் தவிர்ப்பது அவசியமாகும். அதற்கு மாற்றாக, உணவு உண்பதற்குச் சற்று முன்பாக நீர்ச்சத்து மிகுந்த பானங்களையோ அல்லது சாதாரணத் தண்ணீரையோ குடிப்பது, வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இது நாம் அதிக உணவை உட்கொள்வதைத் தடுத்து, எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு கருவியாக இருக்குமே தவிர, வெந்நீர் குடிப்பது மட்டுமே எடையை மாயமாகக் குறைத்துவிடாது என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும்.
அதேபோல், வெந்நீர் குறித்த மற்ற சில நம்பிக்கைகளிலும் அறிவியல் ரீதியான நிரூபணங்கள் குறைவாகவே உள்ளன. வெதுவெதுப்பான நீர் செரிமானத்தைச் சற்றுத் தூண்டக்கூடும் என்று ஒரு சிறிய ஆராய்ச்சி கூறினாலும், அது தோலைப் பளபளப்பாக்கும் என்பதற்கோ அல்லது மாதவிடாய் கால வயிற்று வலியை முற்றிலுமாகக் குணப்படுத்தும் என்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை. மாதவிடாய் காலங்களில் உடல் நீரேற்றத்துடன் (Hydration) இருப்பது அவசியமே தவிர, அது வெந்நீராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மேலும், தொண்டைப் புண்ணிற்கு வெதுவெதுப்பான நீர் இதமாக இருக்குமே தவிர, அதுவே ஒரு முழுமையான மருந்தாகிவிடாது.
Read More : “அடுத்த பட்ஜெட்டை தவெக தாக்கல் செய்யும்”..!! கொள்கை பரப்புச் செயலாளர் அருண்குமார் அதிரடி..!!



