வேற்றுகிரகவாசிகள் மற்றும் UFOக்கள் தொடர்பான கோப்புகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தெரிவித்தார். இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக அவர் கூறினார்.
ஒபாமா கருத்து – டிரம்ப் பதில்
இந்த அறிவிப்பு வெளியாகும் சில மணி நேரங்களுக்கு முன்பு, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஒரு பாட்காஸ்டில் வெளிநில உயிர்கள் இருக்கலாம் என்ற சாத்தியத்தைப் பற்றி பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், ஒபாமா “ரகசிய தகவலை வெளியிட்டார்” என்று குற்றம்சாட்டினார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவை உண்மையா இல்லையா என எனக்குத் தெரியாது. அவரை சிக்கலில் இருந்து காப்பாற்ற, ரகசியங்களை வெளியிடலாம்,” என்றார்.
சமூக வலைதள அறிவிப்பு
இதையடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், “ வேற்றுகிரகவாசிகள், அடையாளம் தெரியாத வானியல் நிகழ்வுகள், UFOக்கள் மற்றும் இதனுடன் தொடர்புடைய அனைத்து தகவல்களையும் வெளியிட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிடுகிறேன்” என்று கூறினார். இந்த விஷயங்கள் “சிக்கலானவை; ஆனால் மிகவும் சுவாரஸ்யமானவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒபாமாவின் விளக்கம்
பின்னர், ஒபாமா விளக்கம் அளித்து, “ வேற்றுகிரகவாசிகள் மனிதர்களுடன் தொடர்பு கொண்டதாக எந்த ஆதாரமும் நான் பார்க்கவில்லை” என்றார். ஆனால், பிரபஞ்சத்தின் பரந்த அளவை கருத்தில் கொண்டால், வேறு இடங்களில் உயிர் இருக்க வாய்ப்பு உண்டு என்றும் அவர் கூறினார்.
UFOக்கள் – மீண்டும் எழுந்த ஆர்வம்
2017 ஆம் ஆண்டில், முன்னாள் பெண்டகன் அதிகாரிகள், அமெரிக்க கடற்படையால் எடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத வானிலுள்ள பொருட்களின் வீடியோக்களை இதன் மூலம், UFOக்கள் குறித்த பொதுமக்கள் ஆர்வம் மீண்டும் அதிகரித்தது.
இதையடுத்து, அமெரிக்க நாடாளுமன்றம், 2022 மே மாதத்தில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக UFO விசாரணை கூட்டங்களை நடத்தியது. பின்னர், அந்த பொருட்கள் ட்ரோன்கள் ஆக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெண்டகன் அலுவலகம் – விசாரணை
2022 ஜூலையில், பெண்டகன் அனைத்து டொமைன் ஒழுங்கின்மை தீர்வு அலுவலகம் என்ற அலுவலகத்தை அமைத்தது. இது, அடையாளம் தெரியாத நிகழ்வுகள் குறித்த ராணுவ தகவல்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு, அந்த அலுவலகத்தின் இயக்குநராக இருந்த ஷான் கிர்பார்ட்ரிக் “வேற்றுகிரக தொழில்நுட்பத்தை ஆய்வு செய்யும் எந்த திட்டத்திற்கும் ஆதாரம் இல்லை” என்று கூறினார்.
2024 ஜூன் மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 18 பக்க ரகசியமற்ற அறிக்கையில், கடந்த ஒரு ஆண்டில் ராணுவத்தினர் 485 அடையாளம் தெரியாத நிகழ்வுகளை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதில் 118 சம்பவங்கள் பலூன்கள், பறவைகள், மனிதர் இல்லா விமானங்கள் போன்ற
சாதாரண பொருட்களாக அடையாளம் காணப்பட்டன. எனினும் இதுவரை வேற்றுகிரகவாசிகள் மற்றும் அவற்றின் செயல்பாடு அல்லது தொழில்நுட்பம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது..



