சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் ரேகா சிங் என்பவரின் கொலை வழக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையைக் காரணம் காட்டித் தவிர்க்கப்பட்ட ஒரு காதல், இன்று ஒரு தாயின் உயிரைப் பறித்துள்ளது.
வனப்பகுதியில் ரேகா சிங்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அந்த இடமே ஒரு பயங்கரமாக இருந்தது. உடல் முழுவதும் சித்திரவதைக்கான தழும்புகள் நிறைந்திருந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைப் போட்டுடைத்தது. ரேகா உயிருடன் இருக்கும்போதே, அவரது உடலில் அமெரிக்க டாலர் நோட்டுக்கட்டுகள் வக்கிரமான முறையில் திணிக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த விகாஸ் மிஸ்ரா, தான் ஒரு காலத்தில் இழந்த காதலுக்குப் பழிவாங்க, தான் சம்பாதித்த செல்வத்தையே சித்திரவதை கருவியாகப் பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல்துறையின் விசாரணையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு ரேகா மற்றும் விகாஸ் இடையே இருந்த காதல் உறவு முறிந்த பின்னணி தெரியவந்தது. “அவனிடம் வசதி இல்லை” என்று கூறி ரேகா பெற்றோரின் விருப்பப்படி அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த நிராகரிப்பை ஏற்க முடியாத விகாஸ், அமெரிக்கா சென்று டாலர்களில் சம்பாதித்து வசதியாக வாழ்ந்தாலும், மனதளவில் ரேகா மகிழ்ச்சியாக இருப்பதை பொறுக்க முடியாமல் தவித்துள்ளார்.
“பணத்திற்காகத்தானே என்னை வேண்டாம் என்றாய்? இதோ இந்தப் பணத்தையே எடுத்துச் செல்” என்று கூறி அவர் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். “பழைய பகையை மறந்துவிட்டான்” என்று நம்பி விகாஸை சந்திக்கச் சென்ற ரேகாவின் முடிவு, அவரது உயிருக்கே உலையாக முடிந்துள்ளது.



