மிகுந்த வேதனை அடைந்தேன்.. கார் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

tamilnadu cm mk stalin

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் காருடன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி கிராமத்தில் நேற்று (03.03.2026) காலை சுமார் 08.30 மணியளவில் புதுவை – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் TN10 BE 8935 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான கிணற்றில் விழுந்து மூழ்கியதில் காரில் பயணம் செய்த சென்னை, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த திரு.ராஜா (வயது 44) த/பெ.மணி மற்றும் திரு.வினோத் (வயது 39) த/பெ. சேகர்; கொளப்பாக்கம் காந்தி தெருவைச் சேர்ந்த திரு.ஜெயமுருகன் (வயது 43) த/பெ.ஆதிகேசவன் மற்றும் மெளலிவாக்கம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த திரு.சேகர் (வயது 27) த/பெ.குமார் ஆகிய 4 நபர்கள் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Read More : மாதம்பட்டி ரங்கராஜுக்கு DNA பரிசோதனை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி..! ஜாய் கிரிசில்டா தொடர்பான வழக்கில் உத்தரவு..

RUPA

Next Post

101 மாயம்..! இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலை தகர்த்த நீர்மூழ்கிக் கப்பல்.. பீதியில் உலக நாடுகள்..!

Wed Mar 4 , 2026
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், இலங்கை கடற்கரைக்கு அருகே, ஒரு ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் (submarine) தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலுக்குப் பிறகு 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.. இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுகுறித்து […]
submarine war ship

You May Like