மார்ச் 31-ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடித்துவிடுங்கள்! இல்லையெனில், நீங்கள் நிறைய இழக்க நேரிடும்!

march 31

2025-26 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. நடப்பு நிதியாண்டு மார்ச் 31 அன்று முடிவடைந்து, புதிய நிதியாண்டான 2026-27 தொடங்கவுள்ளது. இந்நிலையில், வரி செலுத்துவோர் சில முக்கிய நிதி சார்ந்த பணிகளை இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு நிதி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த உரிய நேரத்தில் நிறைவு செய்யப்பட்டால், வரிச்சுமையை குறைப்பது மட்டுமின்றி, அபராதங்கள் மற்றும் கூடுதல் வட்டி செலுத்துவதையும் தவிர்க்க முடியும்.


பழைய வரி விதிப்பு முறையைத் (Old Tax Regime) தேர்ந்தெடுத்துள்ள வரி செலுத்துவோர், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ் வரிச் சலுகைகளைப் பெற, குறிப்பிட்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். PPF, SSY மற்றும் NSC போன்ற திட்டங்கள் இதில் அடங்கும். இத்திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்கைப் பெற முடியும்.

மேலும், ஏற்கனவே உள்ள கணக்குகளைத் தொடர்ந்து செயல்பட வைக்க, அதில் ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச தொகையைச் செலுத்துவதும் அவசியமாகும். வரி சேமிப்புக்காக முதலீடுகள் செய்யப்போவதாக ஊழியர்கள் ஆண்டின் தொடக்கத்திலேயே தங்கள் நிறுவனங்களுக்குத் தெரிவித்திருந்தால், அதற்கான உரிய ஆவணங்களை மார்ச் 31-க்குள் தங்கள் முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால், நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அதிக அளவிலான TDS பிடித்தம் செய்யக்கூடும்.

முன்கூட்டியே வரி செலுத்துவதும் (Advance Tax) மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒருவரின் மொத்த வரிப் பொறுப்பு ரூ. 10,000-க்கு அதிகமாக இருந்தால், அவர் முன்கூட்டியே வரியைச் செலுத்த வேண்டும். இதனை உரிய நேரத்தில் செலுத்தத் தவறினால், வட்டி மற்றும் அபராதங்கள் விதிக்கப்படலாம். மருத்துவக் காப்பீடு (Health Insurance) எடுத்துள்ளவர்களும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D-இன் கீழ் வரி விலக்கைப் பெறலாம். தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ. 25,000 வரையிலும்; 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 50,000 வரையிலும்; பெற்றோருக்கான மருத்துவக் காப்பீட்டிற்கு ரூ. 75,000 வரையிலும் வரி விலக்கு பெற இயலும்.

மேலும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரித் தாக்கலில் (ITR) ஏதேனும் பிழைகள் இருப்பின், ITR-U படிவத்தின் வாயிலாக அதனைப் புதுப்பித்துத் திருத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதுமட்டுமின்றி, வீட்டுக் கடன் (Home Loan) பெற்றுள்ளவர்கள், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 24(B)-இன் கீழ், வீட்டுக் கடனுக்கான வட்டித் தொகையில் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான வரிச் சலுகையைப் பெறலாம். இச்சூழலில், வரி செலுத்துவோர் மேற்கூறிய நிதி சார்ந்த பணிகளை மார்ச் 31-க்குள் நிறைவு செய்வதன் மூலம், தங்கள் வரிச்சுமையை கணிசமாகக் குறைத்துக்கொள்ள முடியும் என்று நிதி வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Read More : ஈஸியா LPG சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்..! Indane, HP, Bharat வாட்ஸ்அப் எண்கள்.. புக்கிங் முறை..! முழு விவரம்..!

RUPA

Next Post

அடுத்த ஷாக்..! ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்..! AI முதலீடுகளை அதிகப்படுத்துவதால் முடிவு..!

Sat Mar 14 , 2026
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, தனது பணியாளர்களில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பிற்கான செலவினங்களை நிறுவனம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.. மேலும், AI-இயங்கும் கருவிகள் மூலம் செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் எத்தனை பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் மற்றும் காலக்கெடு இன்னும் இறுதி […]
meta ai

You May Like