தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் அனல்பறக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு பேச்சுவார்கள் முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா, ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.. பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளும் ஈடுபட்டு வருகின்றன..
மறுபுறம் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த 334 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி உள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.. மேலும் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்உ தவெகவின் 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது..
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன் ஆகியோர் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் சி.டி. நிர்மல் குமார், ராஜ்மோகன், நாஞ்சில் சம்பத் உட்பட தவெகவின் 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது..
Read More : அரசு ஊழியர்களுக்கு பம்பர் ஜாக்பாட்..! 1-ஆம் தேதி முதல் சம்பள உயர்வு? விரைவில் முக்கிய அறிவிப்பு..!



