தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. தேர்தல் ஆணையம் உத்தரவு..!

Untitled design 5 6 jpg 1

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன.. அதன்படி, அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்பும் தேர்தல் ஆணையம் வசம் சென்றுள்ளது.


ஏதாவது மிக முக்கிய பிரச்சனை நடந்தால் மட்டுமே, அரசு உயரதிகாரிகளை, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்கலாம்.. அதவும், தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்று தான் செயல்பட முடியும்.. தமிழகத்தின் 17-வது சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்று அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த காபந்து அரசாக செயல்படும்.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜியாக இருந்த வெங்கட்ராமனை மாற்றி சந்தீப் ராய் ரத்தோரை நியமித்துள்ளது. நாளை காலை டிஜிபியாக உடனடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

RUPA

Next Post

சுங்க வரி குறைப்பு: குட்நியூஸ்..! ஷாம்பு முதல் மருந்துகள் வரை..! இந்த பொருட்களின் விலை மலிவாகும்..!

Fri Apr 3 , 2026
தற்போதைய உலகளாவிய பொருளாதாரச் சூழலில் நிலவும் நிலையற்ற தன்மையைத் தொடர்ந்து, உள்நாட்டு விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, 41 அத்தியாவசிய பெட்ரோ கெமிக்கல் (கச்சா எண்ணெய் சார்ந்த வேதியியல்) பொருட்களின் மீதான சுங்க வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த வரிச் சலுகை, ஜூன் 30, 2026 […]
custom duty exemption india waives duty

You May Like