நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவரது மனைவி கயல்விழிக்கு தற்போது கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அக்கட்சியின் சட்ட ஆலோசகர்களை நியமித்து அறிவித்திருந்தார் சீமான்.
அப்பட்டியலில் தென்சென்னை மாவட்ட பொறுப்பாளராக கயல்விழியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. வழக்கறிஞரான சீமானின் மனைவிக்கு முதல் முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : Education loan | மாஸ் அறிவிப்பு..!! 1,50,000 மாணவர்களின் கல்விக்கடன் ரத்து..!!