விஜய்க்கு அடுத்த ஆப்பு..! சங்கீதா எடுத்த அதிரடி முடிவு..! வெளிவரப் போகும் பல அதிர்ச்சி உண்மைகள்..!

vijay sangeetha n 2

விஜய்யிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அவரின் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார்.. விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும் சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.. மேலும் “ அந்த நடிகை எனது கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்..


மேலும் விவாகரத்து வழக்கு முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க விஜய் அனுமதிக்க வேண்டும் என்றும் தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் புதிய மனு ஒன்றையும் சங்கீதா தாக்கல் செய்திருந்தார்..

விஜய்யும் த்ரிஷாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங்கில் இருப்பதாக அரசல் புரசலாக தகவல் வந்த வண்ணம் இருந்தது.. இந்த சூழலில் சங்கீதாவின் இந்த குற்றச்சாட்டு மூலம் அந்த நடிகை த்ரிஷா என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது..

இந்த பரபரப்பு அடங்குவதற்குள். விஜய்யும், த்ரிஷாவும் ஒரே நிற ஆடையில் ஒன்றாக, கல்பாத்தி அகோரம் மகன் திருமணத்திற்கு நேற்று முன் தினம் வந்தார்.. மேடைக்கு ஒன்றாக சென்று மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒன்றாகவே புறப்பட்டனர்.. ஆனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் என்ன செய்தாலும், அவருக்கு சப்போர்ட் செய்து வந்த விஜய்யின் ரசிகர்கள் இந்த விஷயத்தில் விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.. விஜய்யின் கட்சி தொண்டர்களோ, கட்சியை விட்டு விலகுவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்..

இந்த நிலையில் சங்கீதா தொடர்ந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.. அன்றைய தினம் விஜய் நேரில் ஆஜராக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.. எனினும் தனது தரப்பில் விஜய் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.. விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்படும் பதில் மனுவில் தம்மை பற்றி ஏதேனும் அவதூறு கருத்துகளை தெரிவித்தால் அதற்கு பதிலடி கொடுக்க சங்கீதா முடிவு செய்துள்ளாரம்.

அதன்படி, சங்கீதா ஊடகங்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.. அப்போது விஜய் பற்றிய பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட உள்ளாராம்.. விவாகரத்து வழக்கு பதிவு தாக்கல் செய்தது என்பது குறித்து சங்கீதா விளக்கமளிக்க உள்ளார்..

மேலும் விஜய் தொடர்பான பல புகைப்படங்களையும் வீடியோக்கள் போன்ற ஆதாரங்களை சங்கீதா கைவசம் வைத்திருகிறாராம்.. விஜய் தம்மீது அவதூறு பரப்பும் வகையில் ஏதேனும் மனு தாக்கல் செய்தாலோ உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டவும் சங்கீதா திட்டமிட்டுள்ளாராம்.. விஜய்யின் பதில் மனுவை பொறுத்து தான் சங்கீதாவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது..

எனினும் சமீபத்தில் தனது கட்சி விழாவில் பேசிய விஜய், அதெல்லாம் ஒர்த் இல்லை’ என்று சங்கீதா குறித்து மறைமுகமாக கூறியிருந்தார்.. மேலும் தனது பிரச்சாரத்தில் கூட சங்கீதாவை வைத்து திமுக அவதூறு பரப்புவதாகவும் கூறியிருந்தார்.. இந்த நிலையில் சங்கீதா ஊடகங்களை சந்திக்க உள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Read More : Flash : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..! 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

RUPA

Next Post

வருமான வரி அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல் முறையீடு..!

Mon Apr 13 , 2026
Vijay appeals against Rs. 1.50 crore fine for concealing income!
vijay chennai high court income

You May Like